இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள சிறீசேனாவும் எங்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே சீனாவுடன் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவரது காலத்தில் இலங்கையில் கொழும்பு துறைமுக நகரம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி சீனா நிதியுதவியுடன் கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதேபோல கொழும்பு துறைமுகத்தில் இரண்டு முறை சீனாவின் நீர்மூழ்கி கப்பல் முகாமிட்டு இருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் தோல்விக்கு, அவர் சீனாவுடன் அதிகளவில் நெருக்கமாக செயல்பட்டதும் ஒரு காரணம் என்று தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறீசேனாவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், இலங்கை அதிபர் தேர்தல் முடிவு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லீ நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், சிறீசேனா இலங்கையின் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்காக சீனா அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது. அவர் இலங்கை அரசுக்கும், இலங்கை மக்களுக்கும் தலைமையேற்று நாட்டின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை கொண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்”
இலங்கையின் புதிய அதிபர் சீனாவுடனான நட்புரீதியான கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவார் என்றும், சீனா தொடர்புடைய திட்டங்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு வழங்குவார் என்றும் நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு ஹாங் கூறினார்.
இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே சீனாவுடன் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவரது காலத்தில் இலங்கையில் கொழும்பு துறைமுக நகரம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி சீனா நிதியுதவியுடன் கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதேபோல கொழும்பு துறைமுகத்தில் இரண்டு முறை சீனாவின் நீர்மூழ்கி கப்பல் முகாமிட்டு இருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் தோல்விக்கு, அவர் சீனாவுடன் அதிகளவில் நெருக்கமாக செயல்பட்டதும் ஒரு காரணம் என்று தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறீசேனாவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், இலங்கை அதிபர் தேர்தல் முடிவு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லீ நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், சிறீசேனா இலங்கையின் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்காக சீனா அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது. அவர் இலங்கை அரசுக்கும், இலங்கை மக்களுக்கும் தலைமையேற்று நாட்டின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை கொண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்”
இலங்கையின் புதிய அதிபர் சீனாவுடனான நட்புரீதியான கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவார் என்றும், சீனா தொடர்புடைய திட்டங்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு வழங்குவார் என்றும் நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு ஹாங் கூறினார்.
No comments:
Post a Comment