இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் இருந்து 90000 (86 லட்சம் ரூபாய்) பவுண்டு மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், ஷாம்பெயின் மது வகைகள், பல் செட்டும் கூட திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது.
லேப்டாப் கேமரா, ஐபாட், டெடி பியர் பொம்மை, வயாகரா மாத்திரைகள், செம்பு குழாய், மின்சார கேபிள்கள் என்று திருடப்பட்ட பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த பட்டியலில் தொழிலாளர் துறை அமைச்சரின் 18 கியர் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன பைக்கும் சமீபத்தில் இணைந்துள்ளது.
இதுபோன்ற திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களைக் கண்டுபிடிக்க மோசடி எதிர்ப்பு மற்றும் இழப்பு துறை என்று ஒரு புதிய துறை ஒன்று கடந்த வருடம் தொடங்கப்பட்டதாகவும், இதன் மூலம் மோசடி, கையாடல், திருட்டு ஆகியவற்றால் பாதுகாப்புத்துறைக்கு ஏற்படும் இழப்புகள் குறையும், அதேநேரம் ஆயுத படைகளின் செலவு அதிகரிக்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரூ முர்ரிசன் தெரிவித்தார்.
ஆனால் சென்ற வருடம் 4200 பவுண்டு அளவு மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது. இந்த வருடமோ அது 11500 பவுண்டாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஏழு வருடங்களில் மட்டும் 7 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள (67 கோடி ரூபாய்) பொருட்கள் திருடு போயிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமைச்சகத்துக்குச் சொந்தமான பிரம்மாண்டமான வாஷிங் மெஷின் மற்றும் லாரி திருடு போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் வேலை பார்ப்பவர்கள் இந்த திருட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.
பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் ஆண்டு முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு, மோப்பநாய் சோதனைகள் என பலத்த பாதுகாப்பையும் மீறி இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பது அதிகாரிகளை மலைக்க வைத்துள்ளது.
லேப்டாப் கேமரா, ஐபாட், டெடி பியர் பொம்மை, வயாகரா மாத்திரைகள், செம்பு குழாய், மின்சார கேபிள்கள் என்று திருடப்பட்ட பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த பட்டியலில் தொழிலாளர் துறை அமைச்சரின் 18 கியர் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன பைக்கும் சமீபத்தில் இணைந்துள்ளது.
இதுபோன்ற திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களைக் கண்டுபிடிக்க மோசடி எதிர்ப்பு மற்றும் இழப்பு துறை என்று ஒரு புதிய துறை ஒன்று கடந்த வருடம் தொடங்கப்பட்டதாகவும், இதன் மூலம் மோசடி, கையாடல், திருட்டு ஆகியவற்றால் பாதுகாப்புத்துறைக்கு ஏற்படும் இழப்புகள் குறையும், அதேநேரம் ஆயுத படைகளின் செலவு அதிகரிக்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரூ முர்ரிசன் தெரிவித்தார்.
ஆனால் சென்ற வருடம் 4200 பவுண்டு அளவு மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது. இந்த வருடமோ அது 11500 பவுண்டாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஏழு வருடங்களில் மட்டும் 7 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள (67 கோடி ரூபாய்) பொருட்கள் திருடு போயிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமைச்சகத்துக்குச் சொந்தமான பிரம்மாண்டமான வாஷிங் மெஷின் மற்றும் லாரி திருடு போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் வேலை பார்ப்பவர்கள் இந்த திருட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.
பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் ஆண்டு முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு, மோப்பநாய் சோதனைகள் என பலத்த பாதுகாப்பையும் மீறி இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பது அதிகாரிகளை மலைக்க வைத்துள்ளது.
No comments:
Post a Comment