டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்றும் யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
முதல்வராக யார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 35 சதவீதம் பேர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக ஹர்ஷ்வர்தன் முதல்வராக வேண்டும் என 23 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் மட்டுமே ஷீலா தீட்சித் முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தொகுதிகளை பொறுத்தவரை கடந்த தேர்தலை போல் பா.ஜ.க. முதலிடத்தையும், ஆம் ஆத்மி 2 ஆம் இடத்தையும் பிடிக்கும் என்று தெரிகிறது. கட்சிகளின் செல்வாக்கை பொறுத்தவரை கடந்த வருடம் 39 சதவீதமாக இருந்த பா.ஜ.க.வின் செல்வாக்கு தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 36 சதவீதமாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நீடிக்கிறது.
முதல்வராக யார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 35 சதவீதம் பேர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக ஹர்ஷ்வர்தன் முதல்வராக வேண்டும் என 23 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் மட்டுமே ஷீலா தீட்சித் முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தொகுதிகளை பொறுத்தவரை கடந்த தேர்தலை போல் பா.ஜ.க. முதலிடத்தையும், ஆம் ஆத்மி 2 ஆம் இடத்தையும் பிடிக்கும் என்று தெரிகிறது. கட்சிகளின் செல்வாக்கை பொறுத்தவரை கடந்த வருடம் 39 சதவீதமாக இருந்த பா.ஜ.க.வின் செல்வாக்கு தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 36 சதவீதமாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நீடிக்கிறது.
No comments:
Post a Comment