கௌதம் கார்த்திக் ரங்கூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று காலை வியாசர்பாடி பி.வி.காலனியில் நடந்தது. அங்குள்ள அம்மன் கோவிலில் கௌதம் கார்த்திக் சாமி கும்பிடுவது போன்ற காட்சியை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எடுத்தார்.
அப்போது படப்பிடிப்பை காண ஏராளமானோர் திரண்டனர். அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி கடிதத்தை கேட்டனர். அப்போதுதான், அனுமதி பெறாமல் அவர்கள் படப்பிடிப்பு நடத்தியது தெரிய வந்தது. உடனே அனுமதி வாங்கிவிடுகிறோம் என படக்குழு சொன்னதை போலீசார் ஏற்கவில்லை. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தும்படி அவர்கள் வலியுறுத்தவே வேறு வழியின்றி பேக்கப் சொன்னார் இயக்குனர்.
தற்போது அனுமதிக்காக ரங்கூன் படக்குழு காத்திருக்கிறது.
அப்போது படப்பிடிப்பை காண ஏராளமானோர் திரண்டனர். அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி கடிதத்தை கேட்டனர். அப்போதுதான், அனுமதி பெறாமல் அவர்கள் படப்பிடிப்பு நடத்தியது தெரிய வந்தது. உடனே அனுமதி வாங்கிவிடுகிறோம் என படக்குழு சொன்னதை போலீசார் ஏற்கவில்லை. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தும்படி அவர்கள் வலியுறுத்தவே வேறு வழியின்றி பேக்கப் சொன்னார் இயக்குனர்.
தற்போது அனுமதிக்காக ரங்கூன் படக்குழு காத்திருக்கிறது.
No comments:
Post a Comment