இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றிருக்கலாம். ஆனால் அவரது கட்சிதான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ளது.
எனவே அதை வைத்து அவர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு பெரும் குடைச்சல் கொடுக்க முயலலாம் என்று அஞ்சப்படுகிறது.
இலங்கை அதிபராக இருந்து வந்த ராஜபக்சே தனது பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தோல்வி பயத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்தினார்.
ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல அவரது எதிர்ப்பாளரான மைத்ரிபால சிறிசேனாவிடம் தோற்றுப் போய் விட்டார்.
இருப்பினும் ராஜபக்சேவின் அத்தியாயம் இத்துடன் முடியவில்லை. மாறாக நாடாளுமன்றத்தில் உள்ள தனது இலங்கை சுதந்திராக் கட்சியின் மூலமாக புதிய அதிபருக்கு அவர் குடைச்சலைக் கொடுக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
மொத்தம் 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே கூட்டணிக்கு மொத்தமாக 144 இடங்கள் உள்ளன. இதில் பல கட்சிகள் வெளியேறி விட்டன. அப்படிப் போயும் கூட அக்கட்சிக்கு பெருவாரியான உறுப்பினர்கள் உள்ளன.
2வது பெரிய கட்சியாக ரணில் விக்கிரமசிங்கேவி்ன் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. 3வது பெரிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு. இக்கட்சிக்கு 14 எம்.,பிக்கள் உள்ளனர். 4வது கட்சியாக சரத் பொன்சேகாவின் கட்சிக்கு 7 பேர் உள்ளனர்.
தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள தனது ஆதரவு எம்.பிக்களை வைத்து அதிபரின் அதிகாரங்களைப் பறித்து பிரதமர் வசம் மாற்றும் வகையில் நடவடிக்கைகளை ராஜபக்சே மேற்கொள்ளலாம் என்று சந்தேகிக்கிப்படுகிறது.
இருப்பினும் முன்னாள் அதிபர் சந்திரிகா வசம் சுதந்திராக் கட்சி முழுமையாக சாயும் பட்சத்தில் இந்த நகர்வு தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இலங்கையில் பிரதமர் பதவி என்பது பொம்மை பதவியாகும். உருப்படியான அதிகாரம் பிரதமருக்குக் கிடையாது. மாறாக அதிபரிடம்தான் அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அதை வைத்து அவர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு பெரும் குடைச்சல் கொடுக்க முயலலாம் என்று அஞ்சப்படுகிறது.
இலங்கை அதிபராக இருந்து வந்த ராஜபக்சே தனது பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தோல்வி பயத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்தினார்.
ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல அவரது எதிர்ப்பாளரான மைத்ரிபால சிறிசேனாவிடம் தோற்றுப் போய் விட்டார்.
இருப்பினும் ராஜபக்சேவின் அத்தியாயம் இத்துடன் முடியவில்லை. மாறாக நாடாளுமன்றத்தில் உள்ள தனது இலங்கை சுதந்திராக் கட்சியின் மூலமாக புதிய அதிபருக்கு அவர் குடைச்சலைக் கொடுக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
மொத்தம் 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே கூட்டணிக்கு மொத்தமாக 144 இடங்கள் உள்ளன. இதில் பல கட்சிகள் வெளியேறி விட்டன. அப்படிப் போயும் கூட அக்கட்சிக்கு பெருவாரியான உறுப்பினர்கள் உள்ளன.
2வது பெரிய கட்சியாக ரணில் விக்கிரமசிங்கேவி்ன் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. 3வது பெரிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு. இக்கட்சிக்கு 14 எம்.,பிக்கள் உள்ளனர். 4வது கட்சியாக சரத் பொன்சேகாவின் கட்சிக்கு 7 பேர் உள்ளனர்.
தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள தனது ஆதரவு எம்.பிக்களை வைத்து அதிபரின் அதிகாரங்களைப் பறித்து பிரதமர் வசம் மாற்றும் வகையில் நடவடிக்கைகளை ராஜபக்சே மேற்கொள்ளலாம் என்று சந்தேகிக்கிப்படுகிறது.
இருப்பினும் முன்னாள் அதிபர் சந்திரிகா வசம் சுதந்திராக் கட்சி முழுமையாக சாயும் பட்சத்தில் இந்த நகர்வு தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இலங்கையில் பிரதமர் பதவி என்பது பொம்மை பதவியாகும். உருப்படியான அதிகாரம் பிரதமருக்குக் கிடையாது. மாறாக அதிபரிடம்தான் அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment