நடிகை கனிகா சமீபத்தில் தனது கணவர், குழந்தையுடன் வெளிநாடுகளுக்கு டூர் சென்றார். அப்போது குட்டையான ஷார்ட்ஸ் அணிந்து அவர் கடலில் குளித்த புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கலாச்சார காவலர்கள் கனிகாவின் குட்டை ஷார்ட்ஸை காட்சிப் பொருளாக்கி கண்டனம் செய்யத் தொடங்கினர்.
அவர்களை விளாசி தள்ளியுள்ளார் கனிகா.
மலையாள சினிமாவில் கனிகா தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கண்ணியமான குடும்பப் பெண்ணாக மட்டுமே திரையில் அவரைப் பார்த்தவர்களுக்கு அவரது ஷார்ட்ஸ் அணிந்த புகைப்படங்கள் அலர்ஜியை தோற்றுவித்தன. உங்க வயசு என்னன்னு தெரியாம இப்படி ஷார்ட்ஸ் அணியலாமா என்று ஒரு கேள்வி. அதற்கு பதிலளித்த கனிகா, ஐம்பது வயதிலும் நான் ஷார்ட்ஸ் அணிவேன். நான் போனது கடற்கரைக்கு. அங்கு சேலை அணிந்தா செல்ல வேண்டும் என்று பதிலளித்துள்ளார். இன்னொரு பெண், உங்களுக்கு ஒரு குழந்தை இருப்பது மறந்துவிட்டதா என்று கேட்டுள்ளார்.
கனிகாவுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
நான் ஷார்ட்ஷ் அணிவதால் குறைந்தபட்சம் அவனாவது குறுகிய மனம் கொண்டவனாக இல்லாமல் பெண்களை அவர்களின் வேல்யூவை வைத்து மதிக்கிறவனாக உடையை வைத்து மதிப்பிடாதவனாக வளர்வான் என பதிலடி தந்துள்ளார்.
பெண்களை உடைகளை வைத்து மதிப்பிடும் கலாச்சார காவலர்களுக்கு கனிகா போன்று விமர்சனத்துக்குள்ளாகிறவர்களே தக்க பதிலடி தரவேண்டும். அப்போதுதான் கலாச்சார வாட்ச்மேன்களுக்கு உறைக்கும்.
No comments:
Post a Comment