இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரன் பேடி நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வந்த கிரன் பேடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் டெல்லி பா.ஜ.க. தலைவர் ஹர்ஷ் வர்த்தன் ஆகியோர் முன்னிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை நிலையத்தில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களிடையே பேசிய கிரன் பேடி, பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து, அதனால் ஏற்பட்ட ஈர்ப்பினால் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்ததாகவும், வரும் 7-ம் தேதி நடைபெறும் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வலிமையான, சிந்தனை தெளிவுடன் கூடிய, நிலையான அரசு தேவை. உலகின் நம்பர் ஒன் தலைநகரமாக டெல்லியை நாம் மாற்ற வேண்டியுள்ளது. எனக்கு எப்படி செயலாற்றுவது என்றும் தெரியும். மற்றவர்களை எப்படி செயலாற்ற வைப்பது என்றும் தெரியும் என குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து முதல் மந்திரி வேட்பாளராக கிரண் பேடியை நிறுத்தும் எண்ணம் உள்ளதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த அமித் ஷா, இது தொடர்பாக கட்சியின் பாராளுமன்றக் குழு முடிவு செய்யும் என்று கூறினார்.
அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வந்த கிரன் பேடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் டெல்லி பா.ஜ.க. தலைவர் ஹர்ஷ் வர்த்தன் ஆகியோர் முன்னிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை நிலையத்தில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களிடையே பேசிய கிரன் பேடி, பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து, அதனால் ஏற்பட்ட ஈர்ப்பினால் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்ததாகவும், வரும் 7-ம் தேதி நடைபெறும் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வலிமையான, சிந்தனை தெளிவுடன் கூடிய, நிலையான அரசு தேவை. உலகின் நம்பர் ஒன் தலைநகரமாக டெல்லியை நாம் மாற்ற வேண்டியுள்ளது. எனக்கு எப்படி செயலாற்றுவது என்றும் தெரியும். மற்றவர்களை எப்படி செயலாற்ற வைப்பது என்றும் தெரியும் என குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து முதல் மந்திரி வேட்பாளராக கிரண் பேடியை நிறுத்தும் எண்ணம் உள்ளதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த அமித் ஷா, இது தொடர்பாக கட்சியின் பாராளுமன்றக் குழு முடிவு செய்யும் என்று கூறினார்.
No comments:
Post a Comment