கென்யா நாட்டை சேர்ந்த கிமானி மருகேவை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். யார் இந்த மருகே ? அவர் கென்யாவின் முன்னோடி எழுத்தாளரோ, அரசியல் தலைவரோ இல்லை. அவர் ஒரு சாமானியர். ஆனால் சாதனையாளர் சாமானியர். அதனால் தான் முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகிள் அவருக்காக என்று டூடுல் சித்திரத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
கூகிள் தனது லோகோவில் வரைபடங்களை டூடுலாக வெளியிடும் பழக்கத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். உலகின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் மேதைகளின் பிறந்த நாள் அல்லது நினைவு தினங்களின் போது கூகிள் இப்படி தனது லோகோவில் அவர்கள் நினைவை போற்றும் வகையில் அழகான சித்திரத்தை வெளியிடும். இந்த சித்திரங்கலே டூடுல் என சொல்லப்படுகிறது.
கூகிள் டூடுலில் இடம்பெறச்செய்வது என்பது ஒரு அங்கீகாரம் போல் தான். இந்த வரிசையில் கூகிள் சமீபத்தில் கென்யா நாட்டைச் சேர்ந்த கிமானி மருகே நினைவை போற்றும் வகையில் ஒரு டூடுலை வெளியிட்டுள்ளது. கென்யா நாட்டுக்கான கூகுள் முகப்பு பக்கத்தில் கடந்த 12ஆம் தேதி இந்த சித்திரம் இடம்பெற்றிருந்தது.
அந்த சித்திரத்தை பார்த்தாலே கிமானி மருகே யார் என்பதை ஓரளவு தெரிந்து கொண்டு விடலாம். வயதான முதியவர் ஒருவர் வகுப்பறையில் சிறுவன் பக்கத்தில் அமர்ந்து நோட்டில் எழுதுவது போன்ற அந்த சித்திரத்தில் பார்க்கும் காட்சி தான் மருகே செய்த சாதனை. ஆம், மருகே உலகிலேயே தொடக்க கல்வி பயின்ற மிகவும் வயதானவராக கருதப்படுகிறார். அது தான் அவர் செய்த சாதனை. இதற்காக அவர் உலகின் வயதான தொடக்கப்பள்ளி மாணவனாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.
கின்னஸ் சாதனையாளர் என்பதை விட 84 வயதில் மருகே கல்வி கற்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது தான் முக்கியமான விஷயம்.
2002ஆம் ஆண்டில் கென்யா அரசாங்கம் அனைவருக்கும் தொடக்க கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. இதனையடுத்து 2004ஆம் ஆண்டு மருகே, தானும் கல்வி கற்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு போய் நின்றார். கென்யா சுதந்திர போராட்ட வீரரான மருகேவுக்கு அப்போது 84 வயது. ஆனால் எழுத படிக்க தெரியாது. இந்த குறையை போக்கி கொள்ள முதல் வகுப்பில் சேர்ந்து படிக்க தயாராக இருந்தார். ஆரம்ப எதிர்ப்பை மீறி மருகே எல்டோரெட் பகுதியில் உள்ள தொடக்கப்பகுதியில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு தாத்தா மருகேவும் பள்ளி மாணவர் போல நீலநிற சீருடை அணிந்து தனது கொள்ளுப்பேரன் வயதான மாணவர்களோடு அமர்ந்து எழுத்து கூட்டி படிக்க கற்றுக்கொண்டார்.
கற்பதற்கு வயதில்லை என காட்டிய இந்த செயலுக்காக மருகே சர்வதேச அளவில் பாராட்டப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவும் அழைக்கப்பட்டார். அங்கு அவர் அனைவருக்கும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்தினார்.
உலகின் வயதான மாணவராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மருகே 2009ல் காலமானார். 2011ல் அவரது ஊக்கமளிக்கும் வாழ்க்கை தி பர்ஸ்ட் கிரேடர் எனும் பெயரில் திரைப்படமாக வெளியானது.
மருகே முதல் வகுப்பில் சேர்ந்து படித்து கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய தினத்தின் 11 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கூகிள் அவரை டூடுல் சித்திரமாக வெளியிட்டு பெருமைபடுத்தியுள்ளது.
எதையும் புதிதாக கற்றுக்கொள்ள ஒருபோதும் தாமதமாகிவிடவில்லை என்பதை மருகே உணர்த்தியதாக கூகிள் தெரிவித்துள்ளது.
விஞ்ஞானிகள், கலைஞர்கள் போன்ற புகழ்பெற்ற மனிதர்களை டூடுல் மூலம் பெருமைபடுத்தும் வழக்கம் கொண்ட கூகிள், தனது வாழ்க்கை மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய இந்த கென்ய மனிதருக்காக டூடுல் வெளியிடுவதை நினைத்து மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளது.
கூகிள் தனது லோகோவில் வரைபடங்களை டூடுலாக வெளியிடும் பழக்கத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். உலகின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் மேதைகளின் பிறந்த நாள் அல்லது நினைவு தினங்களின் போது கூகிள் இப்படி தனது லோகோவில் அவர்கள் நினைவை போற்றும் வகையில் அழகான சித்திரத்தை வெளியிடும். இந்த சித்திரங்கலே டூடுல் என சொல்லப்படுகிறது.
கூகிள் டூடுலில் இடம்பெறச்செய்வது என்பது ஒரு அங்கீகாரம் போல் தான். இந்த வரிசையில் கூகிள் சமீபத்தில் கென்யா நாட்டைச் சேர்ந்த கிமானி மருகே நினைவை போற்றும் வகையில் ஒரு டூடுலை வெளியிட்டுள்ளது. கென்யா நாட்டுக்கான கூகுள் முகப்பு பக்கத்தில் கடந்த 12ஆம் தேதி இந்த சித்திரம் இடம்பெற்றிருந்தது.
அந்த சித்திரத்தை பார்த்தாலே கிமானி மருகே யார் என்பதை ஓரளவு தெரிந்து கொண்டு விடலாம். வயதான முதியவர் ஒருவர் வகுப்பறையில் சிறுவன் பக்கத்தில் அமர்ந்து நோட்டில் எழுதுவது போன்ற அந்த சித்திரத்தில் பார்க்கும் காட்சி தான் மருகே செய்த சாதனை. ஆம், மருகே உலகிலேயே தொடக்க கல்வி பயின்ற மிகவும் வயதானவராக கருதப்படுகிறார். அது தான் அவர் செய்த சாதனை. இதற்காக அவர் உலகின் வயதான தொடக்கப்பள்ளி மாணவனாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.
கின்னஸ் சாதனையாளர் என்பதை விட 84 வயதில் மருகே கல்வி கற்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது தான் முக்கியமான விஷயம்.
2002ஆம் ஆண்டில் கென்யா அரசாங்கம் அனைவருக்கும் தொடக்க கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. இதனையடுத்து 2004ஆம் ஆண்டு மருகே, தானும் கல்வி கற்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு போய் நின்றார். கென்யா சுதந்திர போராட்ட வீரரான மருகேவுக்கு அப்போது 84 வயது. ஆனால் எழுத படிக்க தெரியாது. இந்த குறையை போக்கி கொள்ள முதல் வகுப்பில் சேர்ந்து படிக்க தயாராக இருந்தார். ஆரம்ப எதிர்ப்பை மீறி மருகே எல்டோரெட் பகுதியில் உள்ள தொடக்கப்பகுதியில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு தாத்தா மருகேவும் பள்ளி மாணவர் போல நீலநிற சீருடை அணிந்து தனது கொள்ளுப்பேரன் வயதான மாணவர்களோடு அமர்ந்து எழுத்து கூட்டி படிக்க கற்றுக்கொண்டார்.
கற்பதற்கு வயதில்லை என காட்டிய இந்த செயலுக்காக மருகே சர்வதேச அளவில் பாராட்டப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவும் அழைக்கப்பட்டார். அங்கு அவர் அனைவருக்கும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்தினார்.
உலகின் வயதான மாணவராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மருகே 2009ல் காலமானார். 2011ல் அவரது ஊக்கமளிக்கும் வாழ்க்கை தி பர்ஸ்ட் கிரேடர் எனும் பெயரில் திரைப்படமாக வெளியானது.
மருகே முதல் வகுப்பில் சேர்ந்து படித்து கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய தினத்தின் 11 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கூகிள் அவரை டூடுல் சித்திரமாக வெளியிட்டு பெருமைபடுத்தியுள்ளது.
எதையும் புதிதாக கற்றுக்கொள்ள ஒருபோதும் தாமதமாகிவிடவில்லை என்பதை மருகே உணர்த்தியதாக கூகிள் தெரிவித்துள்ளது.
விஞ்ஞானிகள், கலைஞர்கள் போன்ற புகழ்பெற்ற மனிதர்களை டூடுல் மூலம் பெருமைபடுத்தும் வழக்கம் கொண்ட கூகிள், தனது வாழ்க்கை மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய இந்த கென்ய மனிதருக்காக டூடுல் வெளியிடுவதை நினைத்து மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment