மக்களுக்கு, மத்திய அரசு வழங்கும் அனைத்து மானியங்களையும் வங்கி கணக்கு மூலமாக நேரடியாக வழங்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு வங்கி கணக்கு மூலம் பொதுமக்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
தற்போது, மத்திய அரசின் உதவிபெறும் மாணவ – மாணவிகளுக்கும் வங்கி கணக்கு மூலம் நேரடியாக மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் நலன்களை பாதுகாக்கவும், பாரபட்சமின்றியும், இடையூறு இல்லாமலும் உதவி வழங்க நேரடி மானிய திட்டத்தின் கீழ் மாணவர்களின் வங்கி கணக்கில் அனைத்து உதவித் தொகைகளும் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் அனைத்து கல்வி உதவித் தொகையையும், வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தும் திட்டம் முறையாக அமல்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இதற்காக பொது நிதியில் நிர்வாக முறையில் கல்வி நிறுவனங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இணையதளம் வாயிலாக மாணவர்கள் அனுப்பும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து நேரடியாக உதவித் தொகைகளை வழங்க மனிதவள மேம்பாட்டு துறைக்கு உதவியாக அமையும்.
இணையதளம் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு உதவித் தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மனிதவள மேம்பாட்டுத் துறையின் உதவித் தொகை திட்டங்கள் மற்றும் புதிய நடவடிக்கைகளை பல்கலைக் கழகங்களின் வலைதளங்களின் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, மத்திய அரசின் உதவிபெறும் மாணவ – மாணவிகளுக்கும் வங்கி கணக்கு மூலம் நேரடியாக மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் நலன்களை பாதுகாக்கவும், பாரபட்சமின்றியும், இடையூறு இல்லாமலும் உதவி வழங்க நேரடி மானிய திட்டத்தின் கீழ் மாணவர்களின் வங்கி கணக்கில் அனைத்து உதவித் தொகைகளும் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் அனைத்து கல்வி உதவித் தொகையையும், வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தும் திட்டம் முறையாக அமல்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இதற்காக பொது நிதியில் நிர்வாக முறையில் கல்வி நிறுவனங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இணையதளம் வாயிலாக மாணவர்கள் அனுப்பும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து நேரடியாக உதவித் தொகைகளை வழங்க மனிதவள மேம்பாட்டு துறைக்கு உதவியாக அமையும்.
இணையதளம் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு உதவித் தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மனிதவள மேம்பாட்டுத் துறையின் உதவித் தொகை திட்டங்கள் மற்றும் புதிய நடவடிக்கைகளை பல்கலைக் கழகங்களின் வலைதளங்களின் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment