ரசிகர்களுக்கு விஜய்யின் பொங்கல் பரிசு!
திடீர் தீடிரென எதாவது செய்து ரசிகர்களை மகிழ்விப்பது விஜய்யின் வழக்கம். சமீபத்தில் ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் சில ரசிகர்களை மட்டும் அழைத்து அவர்களுடன் ஃபோட்டோ எடுத்து மகிழ்வித்தார். மேலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவருகிறார். எனவே விஜய் தற்போது நடித்துவரும் சிம்புதேவன் பட டைட்டிலை இதே முறையில் வெளியிட முடிவெடுத்திருக்கின்றனர் படக்குழுவினர்.
பொங்கலன்று விஜய் மூலமாகவே விஜய்-சிம்புதேவன் இணைந்துள்ள திரைப்படத்தின் டைட்டிலை வெளியிடுகிறார்களாம். மேலும் விஜய் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ‘புலி’ என டைட்டில் வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. எனவே படத்தின் டைட்டிலுக்காகவும், விஜய்யுடன் பேசவும் ரசிகர்கள் போங்கலன்று ட்விட்டரிலேயே தவம் கிடக்கப்போவது உறுதி.
No comments:
Post a Comment