விரைவில் தொடங்கவிருக்கும் 'அடுத்த தலைமுறை துருவ திட்டத்தின்'படி எல்.இ.டி. விளக்குகள், இலவச 4ஜி வை-பை சேவை மற்றும் சி.சி.டி.வி. கேமரா என பல புதிய திட்டங்களை புதுடெல்லி நகராட்சி செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தின் படி, புதுடெல்லி நகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளக்குகள் மற்றும் 20,000 தெருவிளக்குகள் மாற்றப்பட்டு புதிய தலைமுறையைச் சேர்ந்த எல்.இ.டி. குழல் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இதனுடன் சி.சி.டி.வி. கேமராக்களும் அமைக்கப்பட உள்ளது.
டெல்லி நகராட்சியின் லட்சிய திட்டமான இலவச வை-பை சேவை, கடந்த ஆண்டு கான் மார்க்கெட் மற்றும் கன்னாட் ப்ளேஸ் ஆகிய இரண்டு இடங்களில் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த புதிய திட்டத்தின் படி டெல்லியின் அனைத்து பகுதிகளுக்கும் இச்சேவை விரிவாக்கப்பட உள்ளது. தற்போது இலவச வை-பை சேவை வழங்கப்படும் குறிப்பிட்ட கட்டிடத்திலிருந்து வெளியேறினால் இணைப்பு துண்டிக்கப்படும் பிரச்சனை உள்ளது. புதிய திட்டம் செயல்படத் தொடங்கினால் இந்த பிரச்சனை இருக்காது என அடுத்த தலைமுறை துருவ திட்டத்தின் வடிவமைப்பாளர் ஸ்ரீ வத்சவா தெரிவித்தார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக டெல்லி நகராட்சியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இத்திட்டத்திற்கு நிறுவனங்களிடமிருந்து திட்ட வரைவிற்கான கோரிக்கைகள் வரவேற்கப்படுவதாகவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் இன்னும் நான்கு மாதங்களில் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் படி, புதுடெல்லி நகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளக்குகள் மற்றும் 20,000 தெருவிளக்குகள் மாற்றப்பட்டு புதிய தலைமுறையைச் சேர்ந்த எல்.இ.டி. குழல் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இதனுடன் சி.சி.டி.வி. கேமராக்களும் அமைக்கப்பட உள்ளது.
டெல்லி நகராட்சியின் லட்சிய திட்டமான இலவச வை-பை சேவை, கடந்த ஆண்டு கான் மார்க்கெட் மற்றும் கன்னாட் ப்ளேஸ் ஆகிய இரண்டு இடங்களில் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த புதிய திட்டத்தின் படி டெல்லியின் அனைத்து பகுதிகளுக்கும் இச்சேவை விரிவாக்கப்பட உள்ளது. தற்போது இலவச வை-பை சேவை வழங்கப்படும் குறிப்பிட்ட கட்டிடத்திலிருந்து வெளியேறினால் இணைப்பு துண்டிக்கப்படும் பிரச்சனை உள்ளது. புதிய திட்டம் செயல்படத் தொடங்கினால் இந்த பிரச்சனை இருக்காது என அடுத்த தலைமுறை துருவ திட்டத்தின் வடிவமைப்பாளர் ஸ்ரீ வத்சவா தெரிவித்தார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக டெல்லி நகராட்சியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இத்திட்டத்திற்கு நிறுவனங்களிடமிருந்து திட்ட வரைவிற்கான கோரிக்கைகள் வரவேற்கப்படுவதாகவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் இன்னும் நான்கு மாதங்களில் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment