காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலும், கிரண் பேடியும் அரசியல் நிர்ப்பந்தங்களினால் தற்போது எலியும் பூனையுமாக மாறியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்-மந்திரி வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலும், பா.ஜ.க.வின் முதல் மந்திரி வேட்பாளராக இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடியும் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
இரு நாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த கிரண் பேடி டெல்லி முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை டுவிட்டரில் ‘பாலோ’ செய்துவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கிரண் பேடி தற்போது ‘பிளாக்’ செய்துள்ளார்.
இந்த தடையை நீக்குமாறு கிரண் பேடியை கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ள போதும் அதற்கு கிரண் பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான கருத்துக்களை பதிவு செய்து ‘மாசுபடுத்தி’ வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், 15 மாதங்களுக்கு முன்னரே கெஜ்ரிவாலை நான் ‘பிளாக்’ செய்து விட்டேன். என்னை டுவிட்டரில் ‘பாலோ’ செய்யும் சுமார் 40 லட்சம் அபிமானிகளுக்கும் கெஜ்ரிவாலின் எதிர்மறையான கருத்துக்கள் பரவ வேண்டாம் என்பதற்காகவே அவரை தடை செய்தேன் என கிரண் பேடி இன்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்-மந்திரி வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலும், பா.ஜ.க.வின் முதல் மந்திரி வேட்பாளராக இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடியும் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
இரு நாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த கிரண் பேடி டெல்லி முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை டுவிட்டரில் ‘பாலோ’ செய்துவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கிரண் பேடி தற்போது ‘பிளாக்’ செய்துள்ளார்.
இந்த தடையை நீக்குமாறு கிரண் பேடியை கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ள போதும் அதற்கு கிரண் பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான கருத்துக்களை பதிவு செய்து ‘மாசுபடுத்தி’ வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், 15 மாதங்களுக்கு முன்னரே கெஜ்ரிவாலை நான் ‘பிளாக்’ செய்து விட்டேன். என்னை டுவிட்டரில் ‘பாலோ’ செய்யும் சுமார் 40 லட்சம் அபிமானிகளுக்கும் கெஜ்ரிவாலின் எதிர்மறையான கருத்துக்கள் பரவ வேண்டாம் என்பதற்காகவே அவரை தடை செய்தேன் என கிரண் பேடி இன்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment