காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இளமை கால வரலாற்றை விவரிக்கும் 'சிகப்புப் புடவை’ நூல் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஜேவியர் மோரோ என்ற ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் இயற்றிய இந்த புத்தகத்தில் சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், இளமைக் காலம், ராஜீவுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு, திருமணம் ஆகியவற்றைப் பற்றியும், ராஜீவின் மறைவுக்கு பின்னர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணியாக உயர்ந்தது வரைக்குமான முக்கிய நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளை 'சிவப்புப் புடவை' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.
சோனியா காந்தியின் இளமை கால வரலாற்று நூல் விற்பனைக்கு வருகிறது
2008-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு மொழியில் வெளியான இந்த புத்தகத்தில் பொய்களும், பாதி உண்மைகளும், தவறான தகவல்களும், தரக்குறைவான கருத்துகளும் இடம் பெற்றிருப்பதாக கண்டனம் தெரிவித்த சோனியா காந்தியின் வக்கீல் வழக்கறிஞர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு நூலாசிரியர் ஜேவியர் மோரோவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய ‘சிகப்புப் புடவை’ புத்தகம் இந்தியப் பதிப்பாக தற்போது கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளதாக ரோலி புத்தக நிறுவனம் அறிவித்துள்ளது. 455 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை 395 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி தொடர்பான முக்கிய குறிப்புகளை அவரின் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து திரட்டி இந்த புத்தகத்தை உருவாக்கியிருந்ததாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.
ஜேவியர் மோரோ என்ற ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் இயற்றிய இந்த புத்தகத்தில் சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், இளமைக் காலம், ராஜீவுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு, திருமணம் ஆகியவற்றைப் பற்றியும், ராஜீவின் மறைவுக்கு பின்னர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணியாக உயர்ந்தது வரைக்குமான முக்கிய நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளை 'சிவப்புப் புடவை' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.
சோனியா காந்தியின் இளமை கால வரலாற்று நூல் விற்பனைக்கு வருகிறது
2008-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு மொழியில் வெளியான இந்த புத்தகத்தில் பொய்களும், பாதி உண்மைகளும், தவறான தகவல்களும், தரக்குறைவான கருத்துகளும் இடம் பெற்றிருப்பதாக கண்டனம் தெரிவித்த சோனியா காந்தியின் வக்கீல் வழக்கறிஞர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு நூலாசிரியர் ஜேவியர் மோரோவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய ‘சிகப்புப் புடவை’ புத்தகம் இந்தியப் பதிப்பாக தற்போது கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளதாக ரோலி புத்தக நிறுவனம் அறிவித்துள்ளது. 455 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை 395 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி தொடர்பான முக்கிய குறிப்புகளை அவரின் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து திரட்டி இந்த புத்தகத்தை உருவாக்கியிருந்ததாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment