1945-ம் ஆண்டில் இறந்து விட்டதாக கருதப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1947-ம் ஆண்டிலும் உயிரோடு இருந்ததாகவும், இந்த உண்மை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு தெரியும் என்றும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.
ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியை காதலித்து, 1937 டிசம்பர் 27-ல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1942-ல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்துவிட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.
இந்நிலையில், 1945-ம் ஆண்டில் இறந்து விட்டதாக கருதப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1947-ம் ஆண்டிலும் உயிரோடு இருந்ததாகவும், இந்த உண்மை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு தெரியும் என்றும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ’நேதாஜியின் நட்பு நாடுகளாக இருந்த ஜெர்மனியும், ஜப்பானும் போரில் தோற்ற பிறகு (அந்நாளில்) ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த சீனாவுன் மஞ்சூரியா பகுதிக்கு நேதாஜி தப்பி சென்றார்.
தான் இறந்து விட்டதாக அனைவரையும் நம்ப வைத்தார். அவரது மரணம் தொடர்பாக விசாரித்த முகர்ஜி கமிஷனிடம் எழுத்து மூலமாக அறிக்கை தாக்கல் செய்த அமெரிக்கா, நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறும் நாளில் தைவான் நாட்டில் அதைப்போன்ற எந்த விமான விபத்தும் நடக்கவில்லை. தைவான் விபத்தில் பலியானதாக எந்த உடலும் தைவான் மருத்துவமனையில் கிடக்கவில்லை என்று தெரிவித்திருந்தது.
எனவே, இந்த விமான விபத்து என்பதே ஒரு பொய்க்கதை. 1947-ம் ஆண்டில் அவர் உயிரோடு இருந்தார். இந்த உண்மை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு தெரியும். இது தொடர்பான உண்மைகள் எதிர்காலத்தில் வெளியாகும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.
ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியை காதலித்து, 1937 டிசம்பர் 27-ல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1942-ல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்துவிட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.
இந்நிலையில், 1945-ம் ஆண்டில் இறந்து விட்டதாக கருதப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1947-ம் ஆண்டிலும் உயிரோடு இருந்ததாகவும், இந்த உண்மை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு தெரியும் என்றும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ’நேதாஜியின் நட்பு நாடுகளாக இருந்த ஜெர்மனியும், ஜப்பானும் போரில் தோற்ற பிறகு (அந்நாளில்) ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த சீனாவுன் மஞ்சூரியா பகுதிக்கு நேதாஜி தப்பி சென்றார்.
தான் இறந்து விட்டதாக அனைவரையும் நம்ப வைத்தார். அவரது மரணம் தொடர்பாக விசாரித்த முகர்ஜி கமிஷனிடம் எழுத்து மூலமாக அறிக்கை தாக்கல் செய்த அமெரிக்கா, நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறும் நாளில் தைவான் நாட்டில் அதைப்போன்ற எந்த விமான விபத்தும் நடக்கவில்லை. தைவான் விபத்தில் பலியானதாக எந்த உடலும் தைவான் மருத்துவமனையில் கிடக்கவில்லை என்று தெரிவித்திருந்தது.
எனவே, இந்த விமான விபத்து என்பதே ஒரு பொய்க்கதை. 1947-ம் ஆண்டில் அவர் உயிரோடு இருந்தார். இந்த உண்மை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு தெரியும். இது தொடர்பான உண்மைகள் எதிர்காலத்தில் வெளியாகும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment