மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி படித்து வந்த சாண்ட் விவேகானந்தா பள்ளியின் தலைமையாசிரியர் அந்தப் பெண்ணின் வயதை நிரூபிக்கும் விதமாக பிறப்பு தேதி சான்றிதழ் அளித்திருந்தார். அதில், கற்பழிப்பு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் 1-9-2013 அன்று அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆனதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இந்த சான்றிதழை ஏற்றுக் கொள்ள மறுத்தார். சம்பவத்தின்போது தனது மகளுக்கு 16 வயதுதான் என்று விடாப்பிடியாக கூறிய அவர், இந்த பிறப்பு சான்றிதழ் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், பிலிப்பட் மாவட்டத்தில் உள்ள அந்த பள்ளி வழங்கிய பிறப்பு சான்றிதழ் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் சாண்ட் விவேகானந்தா பள்ளியின் தலைமையாசியரான சாண்ட் கிரிபால் மோசடி வேலை செய்து, அந்த பெண்ணின் உயர்த்திக் காட்டி, 18 வயது ஆனதுபோல் போலிச் சான்றிதழ் அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
அவரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி படித்து வந்த சாண்ட் விவேகானந்தா பள்ளியின் தலைமையாசிரியர் அந்தப் பெண்ணின் வயதை நிரூபிக்கும் விதமாக பிறப்பு தேதி சான்றிதழ் அளித்திருந்தார். அதில், கற்பழிப்பு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் 1-9-2013 அன்று அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆனதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இந்த சான்றிதழை ஏற்றுக் கொள்ள மறுத்தார். சம்பவத்தின்போது தனது மகளுக்கு 16 வயதுதான் என்று விடாப்பிடியாக கூறிய அவர், இந்த பிறப்பு சான்றிதழ் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், பிலிப்பட் மாவட்டத்தில் உள்ள அந்த பள்ளி வழங்கிய பிறப்பு சான்றிதழ் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் சாண்ட் விவேகானந்தா பள்ளியின் தலைமையாசியரான சாண்ட் கிரிபால் மோசடி வேலை செய்து, அந்த பெண்ணின் உயர்த்திக் காட்டி, 18 வயது ஆனதுபோல் போலிச் சான்றிதழ் அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment