சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அதாரு உதாரு’ என்ற பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் விக்னேஷ் சிவன்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாம நடந்து விடும். அப்படிப்பட்டதுதான் ‘என்னை அறிந்தால்’ படத்தில் கிடைத்த வாய்ப்பு.
கௌதம் சார்கிட்ட உதவி இயக்குனரா வேலை செய்யணும்னு பல நாள் ஏங்குனது உண்டு. அது இந்த பாட்டு எழுதுனது மூலம் அது நிறைவேறியுள்ளது. இப்பவும் எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை. எல்லாம் கடவுளின் செயல்.
கௌதம் சார் பாட்டு எழுத சொன்னவுடன் தலை-கால் புரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவுட்-லைன் எழுதி கொடுத்துட்டேன். பின்னர், ஹாரிஸ் ஜெயராஜின் மெட்டுக்கு ஏற்றார்போல் சில வார்த்தைகளை சேர்த்து, மாற்றி பாடல் பதிவு செய்யப்பட்டது.
கௌதம் சாரின் படத்தில் பாட்டு கதையை நகர்த்தி செல்லும். இப்பாட்டு ஒரு குத்து பாடல் மட்டும் கிடையாது. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களை பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைத்திருக்கும்.
பாட்டு எழுதப்படுவது ‘தல’ அஜீத்துக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு பாசிட்டிவாக வந்தது. அதனாலேயே ‘எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்’ என்று ஆரம்பித்தேன். நானும் ஒரு இயக்குனர் என்பதை தாண்டி தல ரசிகர்கள் இடையே எனக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பு என்னை உற்சாகமூட்டுகிறது என்றார்.
விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி-நயன்தாராவை வைத்து ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாம நடந்து விடும். அப்படிப்பட்டதுதான் ‘என்னை அறிந்தால்’ படத்தில் கிடைத்த வாய்ப்பு.
கௌதம் சார்கிட்ட உதவி இயக்குனரா வேலை செய்யணும்னு பல நாள் ஏங்குனது உண்டு. அது இந்த பாட்டு எழுதுனது மூலம் அது நிறைவேறியுள்ளது. இப்பவும் எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை. எல்லாம் கடவுளின் செயல்.
கௌதம் சார் பாட்டு எழுத சொன்னவுடன் தலை-கால் புரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவுட்-லைன் எழுதி கொடுத்துட்டேன். பின்னர், ஹாரிஸ் ஜெயராஜின் மெட்டுக்கு ஏற்றார்போல் சில வார்த்தைகளை சேர்த்து, மாற்றி பாடல் பதிவு செய்யப்பட்டது.
கௌதம் சாரின் படத்தில் பாட்டு கதையை நகர்த்தி செல்லும். இப்பாட்டு ஒரு குத்து பாடல் மட்டும் கிடையாது. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களை பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைத்திருக்கும்.
பாட்டு எழுதப்படுவது ‘தல’ அஜீத்துக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு பாசிட்டிவாக வந்தது. அதனாலேயே ‘எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்’ என்று ஆரம்பித்தேன். நானும் ஒரு இயக்குனர் என்பதை தாண்டி தல ரசிகர்கள் இடையே எனக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பு என்னை உற்சாகமூட்டுகிறது என்றார்.
விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி-நயன்தாராவை வைத்து ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
No comments:
Post a Comment