இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை முன்னாள் மிஸ் ஸ்ரீலங்காவும், பிரபல நடிகையுமான ஜேக்குலின் பெர்ணாண்டஸ் மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 'சல்மான்கான் பிரச்சாரம் செய்வதற்காக இலங்கைக்கு வரவில்லை. பீயிங் ஹியூமன் என்ற அறக்கட்டளை நடத்திய கண் சிகிச்சை முகாமில் கலந்து கொள்ளவே வந்திருந்தார். ஏற்கனவே, அவர் இலங்கையில் பல கண் முகாம்களை நடத்தி வந்திருக்கிறார். எங்களுக்கு எப்போதுமே இலங்கைக்கு செல்வது பிடிக்கும். ஆனால், எங்களுக்கு இந்த முறை போதுமான நேரம் இல்லாததால் நாங்கள் நினைத்த அளவுக்கு முகாமை நடத்த முடியவில்லை.
எனக்கு மக்களுடைய உணர்வுகள் புரிகிறது. நான் எப்போதுமே என்னுடைய அரசியல் பார்வையை சொல்வதே கிடையாது. அது இந்தியாவானாலும் சரி. இலங்கையானாலும் சரி. என்னைப் பொறுத்தவரை இலங்கைக்கு சென்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். எல்லாவற்றிக்கும் மேல் அது எனது சொந்த நாடு. அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்கவே சல்மான் என்னுடன் வந்திருந்தார். அது ஒரு அருமையான வாய்ப்பு. நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவே அங்கு சென்றோம்.
பிரச்சனை என்னவென்றால் நாங்கள் முகாம் நடத்தும்போது அங்கு தேர்தல் வந்துவிட்டது. அவ்வளவுதான். நான் சல்மானுக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால், ஜனநாயகம் என்பது மற்றவரின் கருத்துக்களையும் மதிக்க வேண்டும். நம்ப வேண்டும் என்பதே. யாருக்கு ஆதரவாக போகிறார்கள் என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவரை நீங்கள் தீர்மானித்துவிட முடியாது. எனக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்திய ஒரு விஷயம் என்ன தெரியுமா? இது மாதிரி கதைகளை (குற்றச்சாட்டு) எழுதுவதற்கு முன் எங்களிடம் ஒரு வார்த்தை கூட யாருமே கேட்கவில்லை என்பதுதான்.' என்றார்.
No comments:
Post a Comment