தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் அரசிதழில் ஒரு ஆணை வெளியிட்டது. அதில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காளை சேர்க்கப்பட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசின் ஆணையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழக அரசுதீவிர முயற்சி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்து உள்ளது. எனினும், இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இதனால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று அண்மையில் தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.
மேலும், அவருடைய உத்தரவின் பேரில் தமிழகத்தின் மூத்த அதிகாரிகள் விஜயகுமார், ஆபிரகாம் மற்றும் அயூப்கான் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் செயலாளர், இணை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
திருத்தப்பட்ட அரசாணை
மத்திய அரசு 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி வெளியிட்ட அரசிதழ் ஆணையில் குறிப்பிடப்பட்டு உள்ள விலங்குகள் பாதுகாப்பு பட்டியலில் இருந்து காளையை நீக்கிவிட்டு திருத்தப்பட்ட அரசாணை விரைவில் வெளியிடும்.
இந்த அறிவிப்பு வெளியானதும் மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியது குறித்து கோர்ட்டுக்கு தெரிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால், ஜல்லிக்கட்டின் மீதான தடை நீங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனுதாக்கல்
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா, சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டுக்கு பிறப்பித்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கவும், இந்த மேல்முறையீட்டு மனுவின் மீது வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவும் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
வழக்கமாக மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணைகள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளின் அறைகளில் மட்டுமே நடைபெறும். வக்கீல்கள் உள்ளிட்ட யாரும் இந்த விசாரணையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தமிழக அரசின் இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிமன்ற அமர்வில் வக்கீல்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் அரசிதழில் ஒரு ஆணை வெளியிட்டது. அதில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காளை சேர்க்கப்பட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசின் ஆணையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழக அரசுதீவிர முயற்சி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்து உள்ளது. எனினும், இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இதனால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று அண்மையில் தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.
மேலும், அவருடைய உத்தரவின் பேரில் தமிழகத்தின் மூத்த அதிகாரிகள் விஜயகுமார், ஆபிரகாம் மற்றும் அயூப்கான் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் செயலாளர், இணை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
திருத்தப்பட்ட அரசாணை
மத்திய அரசு 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி வெளியிட்ட அரசிதழ் ஆணையில் குறிப்பிடப்பட்டு உள்ள விலங்குகள் பாதுகாப்பு பட்டியலில் இருந்து காளையை நீக்கிவிட்டு திருத்தப்பட்ட அரசாணை விரைவில் வெளியிடும்.
இந்த அறிவிப்பு வெளியானதும் மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியது குறித்து கோர்ட்டுக்கு தெரிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால், ஜல்லிக்கட்டின் மீதான தடை நீங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனுதாக்கல்
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா, சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டுக்கு பிறப்பித்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கவும், இந்த மேல்முறையீட்டு மனுவின் மீது வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவும் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
வழக்கமாக மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணைகள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளின் அறைகளில் மட்டுமே நடைபெறும். வக்கீல்கள் உள்ளிட்ட யாரும் இந்த விசாரணையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தமிழக அரசின் இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிமன்ற அமர்வில் வக்கீல்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment