பொங்கல், திருவள்ளுவர் தினத்தில் இ-போஸ்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும் என்று தபால்துறை அறிவித்துள்ளது.
சென்னை நகரப்பகுதி தலைமை தபால் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“பப்ளிக் பிராபிரண்ட் பண்ட்” என்ற சேமிப்பு திட்டத்தை தபால் துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் அனைத்து தலைமை தபால் நிலையங்கள் மற்றும் ‘ஏ’ தர தபால் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டம் தற்போது ‘பி’ தர தபால் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்தால் வருமான வரிச்சலுகை பெறலாம். இதில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அருகில் உள்ள தபால் நிலையங்களில் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய மக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை தபால் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தபால்துறை தற்போது இ-போஸ்ட் என்ற சேவையையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்னணு சேவை மூலம் இந்தியாவில் உள்ள எந்த முகவரிக்கும் தகவல் அனுப்ப முடியும். இந்தியாவில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் மூலம் இந்த சேவை அனைவருக்கும் கிடைக்கும்.
இணையதளத்தின் மூலம் இந்த சேவை அனுப்பப்படுகிறது. தகவல் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவருக்கு ஏ4 தாளில் தகவல் கொடுக்கப்படும். ஒரு ஏ4 தாளுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்த சேவையை வாழ்த்து உள்பட பல்வேறு தகவல்களை அனுப்ப மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பொங்கல், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, இ-போஸ்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
பொங்கலுக்கு வாழ்த்து அனுப்புவோர், திருவள்ளுவர் தினத்துக்கு குறள் அனுப்புவோர் இதில் கலந்துகொள்ளலாம். 14-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை அனுப்பப்படும் இ-போஸ்ட் தகவல்கள், இந்த போட்டியில் ஏற்கப்படும். வெற்றி பெற்ற 10 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரப்பகுதி தலைமை தபால் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“பப்ளிக் பிராபிரண்ட் பண்ட்” என்ற சேமிப்பு திட்டத்தை தபால் துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் அனைத்து தலைமை தபால் நிலையங்கள் மற்றும் ‘ஏ’ தர தபால் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டம் தற்போது ‘பி’ தர தபால் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்தால் வருமான வரிச்சலுகை பெறலாம். இதில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அருகில் உள்ள தபால் நிலையங்களில் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய மக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை தபால் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தபால்துறை தற்போது இ-போஸ்ட் என்ற சேவையையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்னணு சேவை மூலம் இந்தியாவில் உள்ள எந்த முகவரிக்கும் தகவல் அனுப்ப முடியும். இந்தியாவில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் மூலம் இந்த சேவை அனைவருக்கும் கிடைக்கும்.
இணையதளத்தின் மூலம் இந்த சேவை அனுப்பப்படுகிறது. தகவல் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவருக்கு ஏ4 தாளில் தகவல் கொடுக்கப்படும். ஒரு ஏ4 தாளுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்த சேவையை வாழ்த்து உள்பட பல்வேறு தகவல்களை அனுப்ப மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பொங்கல், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, இ-போஸ்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
பொங்கலுக்கு வாழ்த்து அனுப்புவோர், திருவள்ளுவர் தினத்துக்கு குறள் அனுப்புவோர் இதில் கலந்துகொள்ளலாம். 14-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை அனுப்பப்படும் இ-போஸ்ட் தகவல்கள், இந்த போட்டியில் ஏற்கப்படும். வெற்றி பெற்ற 10 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment