சத்தீஸ்கரைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள், ஆண் பயிற்சியாளரின் அறையில் இருந்து நள்ளிரவில் வெளியேறும் காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் ஆந்திராவில் கடந்த டிசம்பர் மாதம் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், 26-ம்தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு பயிற்சியாளரின் அறையில் இருந்து சத்தீஸ்கரைச் சேர்ந்த வீராங்கனைகள் சிலர் வெளியேறும் காட்சி பதிவாகியிருந்தது.
விளையாட்டுத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்த இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியானதையடுத்து சத்தீஸ்கர் மாநில டேபிள் டென்னிஸ் சங்க பொதுச் செயலாளரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் ஆந்திராவில் கடந்த டிசம்பர் மாதம் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், 26-ம்தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு பயிற்சியாளரின் அறையில் இருந்து சத்தீஸ்கரைச் சேர்ந்த வீராங்கனைகள் சிலர் வெளியேறும் காட்சி பதிவாகியிருந்தது.
விளையாட்டுத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்த இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியானதையடுத்து சத்தீஸ்கர் மாநில டேபிள் டென்னிஸ் சங்க பொதுச் செயலாளரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
No comments:
Post a Comment