ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்புவை களம்இறக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைவர் இளங்கோவனிடம் தெரிவித்து வருகின்றனர்.
அவர் பிரபலமான நடிகை என்பதால், குஷ்பு தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில், கட்சி குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு ஓட்டுகளை பெறும் என, நம்புகின்றனர். இந்நிலையில், 'தி.மு.க., வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது' என சிலர், இளங்கோவனை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, சத்தியமூர்த்தி பவனில் நேற்று, இளங்கோவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் யசோதா, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கோஷ்டி தலைவர்களிடமும் இளங்கோவன், தொலைபேசி மூலமாக, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அதன் பின், நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், போட்டியிடலாமா என்பது குறித்து, ஆலோசனை நடத்தியிருக்கிறோம்.
வேறு கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது, பொது வேட்பாளருக்கான முயற்சி எடுப்பது என, பல விஷயங்கள் குறித்தும் கருத்து பரிமாற்றம் நடந்திருக்கிறது. அதை, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்துவோம். மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
அவர் பிரபலமான நடிகை என்பதால், குஷ்பு தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில், கட்சி குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு ஓட்டுகளை பெறும் என, நம்புகின்றனர். இந்நிலையில், 'தி.மு.க., வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது' என சிலர், இளங்கோவனை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, சத்தியமூர்த்தி பவனில் நேற்று, இளங்கோவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் யசோதா, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கோஷ்டி தலைவர்களிடமும் இளங்கோவன், தொலைபேசி மூலமாக, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அதன் பின், நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், போட்டியிடலாமா என்பது குறித்து, ஆலோசனை நடத்தியிருக்கிறோம்.
வேறு கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது, பொது வேட்பாளருக்கான முயற்சி எடுப்பது என, பல விஷயங்கள் குறித்தும் கருத்து பரிமாற்றம் நடந்திருக்கிறது. அதை, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்துவோம். மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment