விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, July 1, 2011

    லோக்பால் வரம்புக்குள் பிரதமரை சேர்க்க வேண்டும் என்று கூறியது ஏன்?-கருணாநிதி விளக்கம்


    தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

    கேள்வி:-2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா குற்றஞ் சாட்டியிருக்கிறாரே? பதில்:-2006-ம் ஆண்டு தி.மு.க. பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே, அதாவது 31-3-2006 அன்றே, தமிழக அரசின் மொத்தக்கடன் பொறுப்பு ரூபாய் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும். அதாவது அ.தி.மு.க. ஆட்சியிலேயே அந்த அளவிற்கு கடன் சுமையை வைத்திருந்தார்கள். அந்த கடன் தொகை தான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இன்னும் சொல்ல வேண்டுமேயானால் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிகிதம் அளவிற்கு கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க. ஆட்சியில் கடன் சுமை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.58 சதவிகிதம் தான்.   தி.மு.க. அரசின் மீது ஜெயலலிதா இந்த அளவிற்கு குறை கூறிய போதிலும், இந்தியாவின் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 9-4-2011 அன்று சென்னையிலே கூறும்போது,

    "இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் திருப்திகரமாக கடைப்பிடித்து வரும் ஒரு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். தமிழக அரசின் கடன் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஒரு நாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையை-ஓவர்டிராப்ட்டை தமிழக அரசு பெற்றதில்லை'' என்று கழக அரசின் நிதி மேலாண்மை குறித்துப் பாராட்டி சொல்லியிருக்கிறார். 

    கேள்வி:- கடந்த தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் ஏவல் துறையாக இருந்ததால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும், தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு தரப்படும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்த அறிவிப்பு பற்றி? பதில்:-முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு வந்து இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. காவல்துறையை எந்த அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சி மதித்தது, மதிக்கிறது என்பதற்கு, இரண்டு உதாரணங்களை கூறினால் போதுமென நினைக்கிறேன்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்வதையொட்டி அந்த கட்சியினர் இரவு கொடி கட்டிவிட்டு, ஒரு ஓட்டலில் சென்று உணவருந்தி கொண்டிருந்தார்கள். அப்போது நள்ளிரவு ஆகி விட்டதால், அந்த வழியாக வந்த போலீஸ் துணை கமிஷனர் ஒருவர் அந்த ஓட்டலை மூடச்சொல்ல, அதற்கு அ.தி.மு.க.வினர் நாங்கள் ஆளுங்கட்சி என்று மிரட்டியதால், அந்த அதிகாரி அவர்களை காவல் நிலையத்தில் கொண்டு போய் விட்டு விட்டுச்சென்றுவிட்டார்.

    அந்த செய்தியைக்கேள்விப்பட்ட ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும், மற்றும் அமைச்சரே ஒருவரும் அந்த காவல் நிலையத்திற்கே சென்று "நாங்கள் யார் தெரியுமா?'' என்று அதிகார தோரணையில் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்த ஆளுங்கட்சியினரையெல்லாம் எந்தவித அனுமதியுமின்றி அழைத்துச்சென்றுவிட்டனர். அது மாத்திரமல்ல; அடுத்த நாளே அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவல் துறையின் துணை கமிஷனர் "பட்டாலியனுக்கு'' மாற்றப்பட்டு விட்டார். அதன் தோழமை கட்சியான தே.மு.தி.க.வை சேர்ந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினர், சேலம் மாவட்டம் ஓமலுÖர் காவல் நிலையத்திற்கு சென்று மிரட்டிய செய்தியும் ஏடுகளில் வந்துள்ளது. 

    கேள்வி:-லோக்பால் மசோதாவில் பிரதமரைச் சேர்க்கக் கூடாது என்று ஜெயலலிதா பேட்டியில் சொல்லியிருக்கிறாரே? பதில்:-டெல்லியிலிருந்து திரும்பிய என்னிடம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர நினைக்கும் "லோக்பால்'' மசோதா பற்றி தி.மு.கழகத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது; "ஏற்கனவே தி.மு.க. ஆட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போதே, இது போன்ற ஒரு சட்டம் - ஊழல் ஒழிப்பு சட்டம்-மாநில அளவில் தமிழக அரசினால் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தில் முதல்-அமைச்சரையும் இணைத்து, முதல்-அமைச்சர் உட்பட அனைவரையும் அந்த சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டலாம், அவர்கள் மீது வழக்கு போடலாம் என்று உரிமை கொடுக்கப்பட்டிருந்தது; அதுதான் தி.மு.கழகத்தின் நிலை.

    இப்போது டெல்லியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்த பிறகு அதைப்பற்றி சொல்கிறேன்'' என்று கூறினேன். செய்தியாளர்கள் தொடர்ந்து, ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் முதல்-அமைச்சரை தமிழகத்திலே சேர்த்ததைப்போல, பிரதமரும் லோக்பால் மசோதாவிலே சேர்க்கப்பட வேண்டும் என்பது தான் உங்களுடைய கருத்தா என்று கேட்டதற்கு; "அதுபற்றி உங்கள் ïகத்திற்கே விட்டு விடுகிறேன்.

    நாங்கள் கொண்டு வந்த சட்டத்தில் முதல்-அமைச்சரைத் சேர்த்துத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ïகத்திற்கே விட்டு விடுகிறேன் என்று கூறினேன்.   இதைத்தான் ஒரு சில ஏடுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவுக்கு மாறாக எதிர்மறையாக ஒரு கருத்தினை நான் தெரிவிப்பதைப்போல எழுதியிருந்தார்கள். தமிழக முதல்-அமைச்சர் லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக்கூடாது என்று கருத்து சொல்கிறார். அவருடைய நெருங்கிய தோழமைக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரபூர்வமான ஏடான "ஜனசக்தி''யில் வெளிவந்துள்ள ஒரு பெட்டிச்செய்தியில், லோக்பால் சட்டத்தில் விசாரணை வரம்பிற்குள் பிரதமரும் நீதிபதியும் வர வேண்டும் என்று அன்னா அசாரே கூறுவதற்கு முன்பே;

    டாக்டர் அம்பேத்கர், ஹிரேன் முகர்ஜி, ஏ.பி.பரதன், பிரகாஷ்காரத் என பலரும் கூறுவது, ஏறத்தாழ இந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் கூறுவதாக எழுதியுள்ளது. நான் பிரதமரையும் அந்த வரம்பிற்குள் சேர்க்க வேண்டுமென்று சொன்னது, நாம் "அதற்காக பயப்படவில்லை, தெளிவாக இருக்கிறோம் என்று உலகத்தின் முன்பு தெளிவாக்குவதற்கு அது பயன்படுமே என்பதால்தான்''. எனது இந்தக்கருத்து எந்த அடிப்படையிலே சொல்லப்பட்டதோ, அதே அடிப்படையிலேதான் நேற்றையதினம் பிரதமர் கூட லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து தனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

    அதே காரணத்திற்காகத்தான் தி.மு.கழக அரசு இதற்கான சட்டத்தை கொண்டு வந்தபோது, முதல்-அமைச்சரையும் அந்த வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென்று நானே முன்வந்து தெரிவித்தேன். ``உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்'' என்ற கழகத்தின் நீண்ட நாள் முழக்கத்தை நினைவுபடுத்துகிறேன்.

    இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.


    Posted by விழியே பேசு... at 7:17 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ▼  July (498)
      • ராசாத்தி அம்மாளின் கணக்குப் பிள்ளை கைது
      • நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டு வெளியேற்ற கோரி...
      • 2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாத...
      • கருணாநிதியின் இலங்கை 'ஆதரவு'ப் பேச்சு!
      • 'ராசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர், சோனியா, ...
      • வீரபாண்டியாருக்கு 'ராயல் சல்யூட்'-போலீசார் அதிரடி ...
      • 'நல்ல நேரம்' பார்த்து ராஜினாமா கடிதத்தை கத்காரிக்க...
      • தமிழ் இனத்தை அழித்த பழியை சுமக்கும் இந்தியா-இலங்கை...
      • கேரள மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மேலும் 7 பேர் கைது
      • ஒரு திமுக தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்ட...
      • சென்னை பிஷப் சின்னப்பா, ஜேப்பியார் உள்பட 12 பேர் ம...
      • கேரளாவுக்கு சாதகமான அணை பாதுகாப்பு மசோதா-ஜெ. கடும்...
      • கணவருடன் செல்ல மறுத்த நடிகை: குழந்தைகளை கண்டதும் ம...
      • ஜெயலலிதாவின் குரலுடன் இணைந்து குரல் எழுப்ப வேண்ட...
      • அஜீத்தின் மங்காத்தாவில் ரஜினியின் பல்லேலக்கா!!
      • நடிகர் விவேக் ஓபராய்க்கு பிடிவாராண்ட்!
      • உள்ளாட்சித் தேர்தலில் பாமக- விடுதலைச் சிறுத்தைகள் ...
      • மதுரை இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் பெண் புரோக்கர் ...
      • அத்துமீறிப் போகிறது அதிமுக அடக்குமுறை: கருணாநிதி
      • ஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...
      • என் ரசிகர்களை தாக்கவேண்டாம், என்னை தாக்குங்கள்...!...
      • மு.க. ஸ்டாலின் கைது
      • திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது
      • 'சதமடித்தார்' சச்சின் டெண்டுல்கர்!
      • தான் ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி: பேஷன் ந...
      • நிலத்தை கேட்டு அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த ம...
      • கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
      • 'பிட்' படம் வாங்கல்லியோ பிட் படம் : வாங்க ஆளில்லை...!
      • விஜய்-கவுதம் இணையும் புதிய படம்
      • காலாவதியாகும் பழைய ரேஷன் கார்டுகள்- புது அட்டை தரப...
      • அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்!
      • சிம்பு.... 'நற நறக்கும்' பரத்!
      • சினிமாவில் அரசியலை கலக்க கூடாது: அஜீத் பேட்டி
      • அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்: தயாராகிறார் ரஜினி!
      • இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...
      • தமிழர்களின் நாக்குகளை துடிக்க துடிக்க அறுத்து எரிந...
      • வேலாயுதம் இசை வெளியீட்டு தேதி!
      • செய்திச் சுருக்கம்: ஜூலை 28, 2011
      • சென்னை மேயரை கண்டதும் தமிழக அமைச்சர் ஓட்டம்
      • தளபதியின் தம்பி திடீர் மரணம் : அஞ்சலி செலுத்த அனு...
      • கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக...
      • கடவுளுக்கு நிகரானவர் ரஜினி-ஜூம் டிவி புகழாரம்
      • லோக்பால் மசோதா: பிரதமர், நீதித்துறைக்கு விலக்கு!
      • ஆக 5-க்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்க வேண்டும்- உ...
      • கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட...
      • எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...
      • மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...
      • தமிழ் ஈழம் மலர விஜய் பாடுபடுவார்-எஸ்.ஏ.சந்திரசேகர்...
      • நான் 'கஜினி' இல்லை- கல்மாடி 'அலேக்' பல்டி!
      • வீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...
      • தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்!
      • வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு
      • அழகிரியின் கூட்டாளி தளபதி மீதும் பாயுமா குண்டர் சட...
      • மாணவச் செல்வங்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணிக்க வே...
      • தமிழக அரசு தவறு செய்து விட்டது- அரசு வக்கீலின் 'சே...
      • 2 வருடமாக அறையில் அடைத்து கற்பழிப்பு: முக்கிய புள்...
      • திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ம.க.
      • இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்
      • ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து... 'பசு' நடிகராலும் ...
      • ஆசிரியர் அடித்து மாணவர் மரணம்: சகமாணவர்கள் சாலை மற...
      • சேற்றில் மூழ்கிய தீபிகாபடுகோன் - கே.எஸ்.ரவிகுமார்
      • கொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்!
      • திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம்- பாமக பொது...
      • சுக்கல் சுக்கலாக சிதறப் போகிறது அல் கொய்தா!
      • மலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...
      • 2ஜி ஊழலுக்கு அமைச்சரவைதான் பொறுப்பேற்க வேண்டும்: ச...
      • பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த்...
      • விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து...
      • டீன் ஏஜ் பெண்களை கவனமா பார்த்துக்கங்க
      • மங்காத்தா - 19; வேலாயுதம் - 31 ?
      • தங்கபாலுவின் ஆதரவாளர்கள் ஆ.ராசாவின் உருவபொம்மை எர...
      • கட்சி நிர்வாகிகள் பரிசளித்த துணியால் ஷூவை துடைத்த ...
      • ஆபாசம் - வன்முறை படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது:...
      • இலங்கை தமிழர்களுக்காக துப்பாக்கியை தூக்க வேண்டாம்;...
      • முனி - 2... அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!
      • சரிந்த செல்வாக்கு, தகர்ந்த கனவுகள்... தவிப்பில் மம...
      • மோட்டார்சைக்கிள் ஓட்டி அசத்திய நடிகை கேத்ரீனா கைப்
      • ஆபாச பாட்டு... அமீர் கானுக்கு நோட்டீஸ்!
      • ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு விஜயலட்சுமி விவகாரம...
      • இலங்கையிடம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோ கூடாது!: கி.வீரமணி
      • சமச்சீர் கல்வி கோரி வகுப்புப் புறக்கணிப்புப் போராட...
      • இந்தியா வந்தார் பாக். வெளியுறவு அமைச்சர் ஹினா
      • தலித்களின் வீடுகளை இடித்து, நிலத்தை ஆக்கிரமித்த ரா...
      • ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு
      • ஈவ் டீசிங்: பிளஸ்-2 மாணவி தற்கொலை: 2 மாணவர்கள் தலை...
      • போலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்!
      • கருணாநிதியின் முன்னாள் உதவியாளர், ஜாபர்சேட் வீடுகள...
      • முதலில் பிரதமரும், சிதம்பரமும் பதவி விலகட்டும்: எத...
      • கும்பலாக விபச்சாரத்தில் ஈடுபடும் இலங்கை டிவி நடிகை...
      • முதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...
      • 2ஜி: பிரதமரை நான் குற்றம் சாட்டவில்லை-நீதிமன்றத்தி...
      • கலாநிதி மாறன் இன்று காவல் நிலையத்தில் ஆஜராவாரா?
      • ரவிச்சந்திரன் நடித்த முதல் படத்தில் நான்தான் அவருக...
      • பதவிக்காக மட்டும் வாழக்கூடாது: டி. ராஜேந்தர்
      • குற்றவாளி, தன்னை காத்துக்கொள்ள கூறும் புகார்;ஆ.ராச...
      • நான் இயக்கும் படத்தில் குறளரசன் கதாநாயகனாக நடிக்கி...
      • ராஜபக்சேக்கு எதிராக விஜய் ஏன் கையெழுத்து போட மறுக்...
      • திருச்சி: 50 குழந்தைகள் சிசு கொட்டி கிடக்கும் காட்...
      • வீட்டை ஆக்கிரமித்ததாக புகார்: நடிகர் கைது
      • கலைந்தது விஜயின் வேஷம் : ராஜபக்சேவை தண்டிக்க கோரி ...
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.