விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, March 3, 2012

    விரைவில் கைதாகிறார் கூடங்குளம் உதயக்குமார்?


    கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவர் உதயக்குமார் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்று கூடங்குளம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி ஜார்ஜின் கூடங்குளம் வருகையைத் தொடர்ந்தே இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ரஷ்ய ஒத்துழைப்புடன் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் எங்களுக்கு வேண்டாம். இந்த அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கினால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், வாழ்க்கை சீர்குலையும் என்ற கோஷத்துடன் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தது அணு மின் நிலைய எதிர்ப்புக் குழு. கிராமத்தினர், பெண்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினருடன் தொடங்கிய இந்த உண்ணாவிரதம் நாளுக்கு நாள் வலுப்பெறவே ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தது. உதயக்குமார் வெளிச்சத்திற்கு வந்தார்.

    இதையடுத்து கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதுதான், எனவே போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 16ம் தேதி கோரிக்கை விடுத்தார்.

    செப்டம்பர் 19ம் தேதி அவர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மக்களின் அச்சம் போகும் வரை இந்த திட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். அதன் பின்னர் பிரதமரின் உத்தரவின் பேரில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இடிந்தகரை வந்தார். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில்தான் தமிழக அமைச்சரவையில், கூட்ங்குளம் பகுதி மக்களின் அச்சம் போக்கப்படும் வரை அணு மின் நிலைய செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது.

    அக்டோபர் 7ம் தேதி தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு குழுவும், போராட்டக்காரர்கள் அடங்கிய குழுவும் பிரதமரை சந்தித்துப் பேசினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து உண்ணாவிரதம் தொடரும் என உதயக்குமார் அறிவித்தார்.

    இந்த நிலையில்தான் நவம்பர் 7ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றிப் பார்த்து ஆய்வு நடத்தி ஒரு ஆபத்தும் இல்லை என்று அறிவித்தார். ஆனால் போராட்டக்குழுவினர் தங்களது நிலையிலிருந்து விலகவில்லை. மாறாக கலாமை கடுமையாக விமர்சித்தனர். கலாமையே இவர்கள் விமர்சித்ததால் கடும் அதிருப்திக்குள்ளானார்கள்.

    முடிவே இல்லாமல் பிரச்சினை நீண்டு வந்த நிலையில்தான் பேராசிரியர் இனியன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை பிப்ரவரி 29ம் தேதி நேரில் சந்தித்துப் பேசினர்.

    இந்த சந்திப்புக்குப் பிறகுதான் தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது போராட்டக்காரர்களின் பிடிவாதம் தமிழக அரசுக்கு கடும் அதிருப்தியைத் தந்துள்ளதாக கூறப்படுகிறது. பல முறை விளக்கம் அளித்த பின்னரும் கூட போராட்டக்காரரர்கள் பிடிவாதமாக அணு உலை வேண்டாம் என்று சொல்வதை முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதை உதயக்குமாரிடமே நேரில் முதல்வர் சொல்லியதாகவும் கூறுகிறார்கள்.

    இதையடுத்து அணு மின் நிலையத்தின் செயல்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு காவல்துறையை அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே கூடுதல் டிஜிபி ஜார்ஜ் இன்று கூடங்குளம் வந்துள்ளார்.

    மேலும், தன்னை உதயக்குமார் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு சந்தித்தபோது உதயக்குமாரிடம், முதல்வர் முகம் கொடுத்தே பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டால் அரசுக்குப் பெருமளவில் கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதை உணர்ந்துள்ள ஜெயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்கினால், மின்தடையை பெருமளவில் குறைக்க முடியும் என்று நம்புகிறார். ஆனால் உதயக்குமார் தலைமையிலான குழுவினர் போராட்டங்களைத் தொடரப் போவதாக மட்டுமே தொடர்ந்து கூறி வருவது அவரை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளதாம். இதனால்தான் இந்த முறை அணு மின் நிலையப் போராட்டங்களை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்று அவர் நேரடியாகவே கூறி விட்டதாக கூறுகிறார்கள்.

    இதனால் உதயக்குமார் கடும் அதிர்ச்சியாகி விட்டாராம். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த அவர், இந்த அம்மாவைப் போய் நம்பி வந்தோமே என்று அதிருப்தியாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முதல்வரின் காதுகளுக்கும் எட்டி விட்டதாக கூறுகிறார்கள்.

    இந்தப் பின்னணியில், அணு மின் நிலையப் பணிகளை தொடங்க தமிழக அரசு விரைவில் மத்திய அரசுக்கு பச்சைக் கொடி காட்டப் போவதாக பரபரப்பாக கூறப்படுகிறது. அப்படி அறிவித்தவுடன் போராட்டங்கள் வெடித்தால் அதை ஒடுக்குவதற்காகவே இப்போதே ஜார்ஜை கூடங்குளத்திற்கு முதல்வர் அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

    மேலும் புதிய போராட்டங்களை உதயக்குமார் அறிவித்தார் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் போலீஸாரைக் குவித்து எந்த ரூபத்திலும் போராட்டமோ, தடங்கலோ ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்தப் புதிய திருப்பத்தால் கூடங்குளம் பகுதியில் பரபரப்பு கூடி வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரலாம் என்று கூறுகிறார்கள்.


    Posted by விழியே பேசு... at 9:46 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ▼  March (333)
      • இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் ...
      • முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மி...
      • ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
      • ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தக...
      • கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வ...
      • உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'
      • போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்...
      • 'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
      • ''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6...
      • மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
      • யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
      • சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத...
      • தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : ...
      • ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?
      • கருணாநிதி மீது ராமதாஸ் பாய்ச்சல்: எதிர்க்கட்சியானா...
      • இணைய தளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட தடை: ஐகோ...
      • 3-டி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘டைட்டா...
      • தாம்பரத்தில் வீடு புகுந்து நந்தா பட பாணியில் கொள்ள...
      • திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெர...
      • நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயன்றேனா!: ந...
      • பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...
      • தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,0...
      • கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!
      • 'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான'...
      • கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில...
      • பட முன்னோட்டம் : 3
      • தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? ...
      • கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் த...
      • சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளி...
      • தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உய...
      • மீண்டும் இணையும் சகோதரிகள் :போயஸ் கார்டனில் சசிகலா!
      • ஜெயலலிதாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்ட...
      • ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையா...
      • இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக...
      • ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்...
      • டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொ...
      • கூடங்குளம்: உண்ணாவிரதம் வாபஸ்!
      • ராஜீவ் காந்தி கொலை: 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு ...
      • அரை குறை ஆடை அணிவதா?: நடிகை ஸ்ரீதேவிக்கு பெண்கள் ச...
      • படையினரை காட்டிக் கொடுத்து தப்பிக்க ராஜபக்சே 'ப்ளா...
      • சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்
      • ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வ...
      • லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா!
      • கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
      • அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இரு...
      • ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்...
      • கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.விடமிருந்து முதல்வருக்கு கடி...
      • சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்
      • ஆசியக் கோப்பை பைனலில் உண்மையில் வென்றது யார்? :புத...
      • கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: சீமான்
      • தமிழக பட்ஜெட்: நிலத்தின் விலை உயரும்...!
      • இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர்...
      • தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
      • மின்வெட்டு குறித்து கருணாநிதியை ஏற்கனவே எச்சரித்தே...
      • ஐ.பி.எல். பயத்தில் அஜித்..!
      • சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம்
      • இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
      • அஜீத்தின் பிறந்த நாளுக்கு பில்லா வராது...
      • மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
      • மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’
      • செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : ...
      • எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சி...
      • இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ...
      • அரசு விடுமுறை நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
      • ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ர...
      • கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன...
      • ஐ.நா. தீர்மானத்தால் பதட்டம்: இந்திய எம்.பி.க்களின்...
      • 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!
      • எல்லா வகையிலும் முயன்றோம்: ராஜபக்ஷேவுக்கு பிரதமர் ...
      • நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
      • கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாத...
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
      • யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே தி...
      • இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக ...
      • இனி கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!
      • இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்த...
      • ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
      • ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்...
      • சீனாவில் ராணுவ புரட்சியா?
      • இளமைக்காக த்ரிஷா ஊசி
      • வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
      • 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்: நீதி...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உய...
      • ஓய்வு பற்றி யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை: சச்சின்
      • இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபு...
      • இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. எதையும் செய்யக் கூடாது-...
      • 'ஐ லவ் யூ ஈரானியர்கள்'.. பேஸ்புக்கில் கலக்கும் இஸ்...
      • இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா...
      • இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியத...
      • ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்...
      • இந்தியாவின் இரட்டை வேடம் ஐ.நாவில் அம்பலம்
      • ரூட்டை மாத்து !: விஜய்
      • இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபர...
      • ‘பரதேசி’யான பாலாவின் படம்
      • கார்த்தி-யின் மூன்றாவது நாயகி
      • இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசி...
      • இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த ந...
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...
      • அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்...
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.