விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, November 26, 2014

    ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?

    ராஜபக்சவின் குடும்ப ஆட்சியின் மேல் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பை அறுவடை செய்வாரா சிறிசேன?

    இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. நகர்வுகள், திருப்பங்கள், திடீர் செய்திகள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே போரொன்று வெடித்திருப்பதையே நிரூபணம் செய்கின்றன. அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகராக (வேட்பாளர்) வெளிப் பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு பலத்த சவாலாகியுள்ளது.

    இதுவரை ராஜபக்ச அரசிலிருந்து அமைச்சர்கள் மூவர், பிரதியமைச்சர் ஒருவர், பாராளுமன்ற உறுப் பினர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். இன்னும் 20 பேர் அளவில் விலகிச் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாள் டிசம்பர் 8 என்றும், வாக்கெடுப்பு 8 ஜனவரி 2015-ல் என்றும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆசிர்வாதத்துடன் அரசின் எதிரணி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராகக் களமிறங்குகிறார். இதனை அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, 21 நவம்பர் அன்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

    சரியும் சீட்டுக்கட்டு வீடு

    மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன்னதாகவே அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய அரச பொறுப்புகளிலிருந்து வெளியேறியிருந்தது. இன்னும் அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டிருக்கும் அமைச்


    சர்கள் பலரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பாக இருந்துகொண்டிருக்கிற பெருந்தலை களும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஅபேட்சகருக்கு ஆதரவளிக்கக் கூடுமான சூழ்நிலைகள் எழுந்துள்ளன.

    ஜாதிக ஹெல உறுமய, பத்தொன்பது அம்சக் கோரிக்கைகள் கொண்ட அரசியலமைப்புத் திருத் தத்தை முன்மொழிந்திருந்தது. இந்தக் கோரிக்கைகள் மறுதலிக்கப்படுமானால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்றும், ராஜபக்சவைத் தோற்கடிப்

    போம் என்றும் அந்தக் கட்சி பகிரங்கமாகவே சவால் விடுத்திருந்தபோதும் அரசு பொருட்படுத்தியிருக்க வில்லை. ஆகவே, முன்னர் கூறிய விதமாக ஜாதிக ஹெல உறுமய அரசப் பொறுப்புகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளது.

    மைத்திரிபால சிறிசேனவின் வெளியேற்றம் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாதிருந்ததுடன், அனுமானத்

    துக்குக்கூட இடமளிக்காதிருந்தது. 1989-ல் பாராளு மன்றத்துக்குப் பிரவேசித்த மைத்திரிபால சிறிசேன 1994-ல் அமைச்சராகப் பதவிவகிக்கத் தொடங்கியதுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவின் வலக்கரமாகவும் இருந்துவந்தவர். எனவேதான், சந்திரிகா பண்டார நாயக்க இவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் நியமித்திருந்தார்.

    பொது அபேட்சகருக்கு ஆதரவு கிடைக்குமா?

    இத்தகைய பின்னணிகளில் இடம்பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அரசியல் விமர்சனங்கள் பல தளங்களிலிருந்தும் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடு மளவு மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பது தெளிவானது. ஆனால், பொது அபேட்சகர் என்கிற அடிப்படையில் எதிர்க் கட்சிகளின் கூட்டு ஒருங்கிணைப்பு பலம்பெற்றதாகியுள்ளது. இந்தக் கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளும் இணைந்துகொள்ளக்கூடும். சிங்களக் கடும் போக்குவாதிகளின் ஆதிக்கமிக்க இந்தக் கட்சிகள் பொது அபேட்சகருக்கு ஆதரவாக இணையும்போது இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்துக்கான முஸ்தீபு களாக இவை பார்க்கப்படுகின்றன. 20 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டாட்சி இத்தோடு முடிவுக்கு வந்துவிடக்கூடும் என்பதான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

    பாராமுகம் கொண்ட சிறிசேன


    இலங்கை அரசியலில் என்றென்றைக்குமானதாக இருந்துகொண்டிருக்கும் இனப் பிரச்சினையை இந்த மைத்திரிபால சிறிசேன தீர்த்துவைப்பார் என்பதற்கான எந்த உத்தரவாதமுமில்லை. மைத்திரிபால சிறிசேன, கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத் தவரோ கிளர்ந்தெழுந்தவரோயில்லை. அநீதிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருட்படுத்தியவரும் இல்லை. ஆக, அரசிலிருந்து வெளியேறியவர் என்ற தகுதி கொண்டு சிறுபான்மை மக்களுக்கு விமோசனத் தைப் பெற்றுத்தருவார் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

    தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம்களின் செல்வாக்கைப் பெற்றிருக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மைக் கட்சிகள் இதுவரை எந்த முடிவுகளையும் அறிவிக்கவில்லை. பொது அபேட்சகர்கள் தேர்தல் விஞ் ஞாபனங்களை (தேர்தல் அறிக்கை) வெளியிட்டதன் பின்னதாக, அதன் அடிப்படையிலேயே தமது ஆதரவைத் தெரிவிப்பதென்று இவ்விரு சிறுபான்மைக் கட்சிகளும் தீர்மானம் எடுத்திருக்கின்றன. இந்தக் கட்சிகளின் தீர்மானங்கள் நிர்மாண சக்திகளாக விளங்க இடமிருக்கிறது.

    ‘யுத்த வெற்றி; என்ற மாயை


    ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு மேலும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில், தேர்தலுக்கு அறிவிப்பு செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசியல் கணக்கு பிழைத்துவிடுமோ (பிழையாகிவிடுமோ) என்கிற பதற்ற நிலையையே அடைந்துள்ளார்.

    2009-ல் புலிகளை இல்லாதொழித்துப் பெற்ற ‘யுத்த வெற்றி’யைத் தேர்தல் வெற்றியாகச் சந்தைப் படுத்தியே இரண்டாவது முறையாக இவர் ஜனாதிபதியாகி யிருந்தார்.

    இன்னும் இரு ஆண்டுகளில் தமது பதவிக் காலம் முழுவதும் முடிவடைந்த பின்னர் இன்னொரு தேர்தலை எதிர்கொள்வதற்கு ‘யுத்த வெற்றி’யைச் சந்தைப்படுத்தும் தந்திரம் சிங்களப் பெரும்பான்மை மக்களிடையே எடுபடாதென்றும், அதற்குள்ளாக இந்த மாயை காலாவதியாகிவிடும் என்பதையும் அனு மானித்தே தேர்தலை அறிவித்தார்.

    சட்டத் திருத்தம்

    1978-ல் ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் பிரகடனம் செய்யப்பட்ட அரசியலமைப்பில் இருந்த ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையிய’லிலும், ‘ஒருவர் இரு முறைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்’ என்பதையும் ‘ஒருவர் எத்தனை முறையும் பதவி வகிக்கலாம்’ என்பதாக மாற்றியமைத்து

    18-வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார் மகிந்த ராஜபக்ச. எனினும், திருத்தத்தை மொழிந்தவர் என்ற வகையில் அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி அபேட்சகராகக் களமிறங்க முடியாதென்ற சட்டச் சிக்கல்கள் எழுந்தன. இது குறித்த சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து ஆலோசனை தரும்படியாக நீதித்துறையை மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதுக்கு அமைய அதி உயர்நீதிமன்றத்தில் கூடிய பத்து நீதிபதிகள் அடங்கிய குழு, மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகராகக் களமிறங்க முடியும் என்பதாக ஒருமித்த அபிப்பிராயத்தை வெளியிட்டது.

    மகிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசானது சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதி (ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள்) மற்றும் சிறு கட்சிகளின் கூட்டணியே ஆகும். இதே விதமான அரசியல் கூட்டுச் சித்தாந்தமொன்றைப் பிரதியீடு செய்கின்ற நடவடிக்கையினூடாகவே, மகிந்த ராஜபக்சவின் குடும்பத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும் என்பது போன்ற வியூகத்துடன் அட்டவணைப் படுத்தப்பட்ட நிரல்களாகவே அரசியல் நிகழ்ச்சிகள் யாவும் அமைந்துள்ளன. எதிர்க் கட்சி தலைமையில் உருவாகிக்கொண்டிருக்கின்ற கூட்டணியை இந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியுள்ளது. இதற்கமைய, எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சியானது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியையும், சிறு கட்சிகளையும் கொண்ட பலம் பொருந்திய கூட்டணியாக உருமாறிக்கொண்டிருக்கிறது.

    சந்திரிகாவின் மறுபிரவேசம்

    ஜனாதிபதிப் பதவியிலிருந்தும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் தூக்கி வீசப்பட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமைதியாகக் கழித்த அஞ்ஞாதவாசத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார். தனது தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரா நாயக்க வினால் தோற்றுவிக்கப்பட்டு, பிரதமராக இருந்த தனது தாய் சிறிமாவோ பண்டார நாயக்கவினால் வளர்த்தெடுக்கப்பட்டு, தன்னை ஜனாதிபதியாக உயர்த்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தான் ஒழித்துக்கட்டப் பட்டதால் அதற்குக் காரணமான துரோகிகளைக்களை யெடுக்கவும், பலிதீர்க்கவும் இப்படியொரு ஜனாதிபதித் தேர்தலுக்காகவே காத்திருந்தவர்போல உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார் சந்திரிகா பண்டார நாயக்க!


    இந்தப் பின்னணியில் சந்திரிகா பண்டார நாயக் கவுக்கு இது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மகிந்த ராஜபக்சவிடமிருந்து மீட்பதற்கான போராட்டம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்து வதற்கான போராட்டம்.




    மேலும் .....

    தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?

     


    சூர்யா படத்தில் மூன்று நாயகிகள்!

     


    அ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை?: முழு விவரம்



    முதல் முறையாக கௌதம் மேனன்! இரண்டாவது முறையாக ஷங்கர்!!




    இப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்பரப்பு பேட்டி




    அன்று விஜய் இன்று விக்ரம்




    அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எதிரொலி! மேயர் சைதை துரைசாமி அதிமுகவில்ஓரங்கட்டப்பட்டார்!!


    புதுப் பிரச்னையில் 'லிங்கா'!


    ஜெயலலிதா இல்லை பயம் போச்சு! சட்டப்பேரவைக்கு வர கருணாநிதி திட்டம்?- திமுகஆலோசனை


    லிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை!


    ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?


    பிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு கிடைக்கும்?



    சீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்திற்குள் வழங்க ஐகோர்ட்டுஉத்தரவு





    Posted by விழியே பேசு... at 10:08 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: "படைப்புகள் ..., செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ▼  November (469)
      • முத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு
      • வைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...
      • வைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக
      • லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை!
      • லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்
      • லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!
      • தமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்
      • நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்
      • கிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்
      • மீண்டும் ஏமாற்றிய சிம்பு
      • இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...
      • பாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி
      • சொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு
      • பிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை
      • யாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்? - லிங்கா சிறப்புத்...
      • விஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்!
      • முதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...
      • கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!
      • அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா
      • கமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்
      • அதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...
      • 29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை
      • விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...
      • விசிடி ரெய்டில் விளம்பரம்!
      • ஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்
      • சினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...
      • குஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி
      • சாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியாம்!
      • தனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி!
      • ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை
      • பிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகோ
      • உயிருக்கு போராடுகிறேனா...? பிரபல நடிகை விளாசல்
      • எதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...
      • ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...
      • ஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா
      • சோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா
      • பவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி
      • சிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது
      • ஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு
      • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....
      • பெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...
      • எனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...
      • நடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்! வெல்வ...
      • பார்த்திபன் மீது கடுப்பு ....
      • வறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...
      • மரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...
      • தமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...
      • உனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...
      • 'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...
      • நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...
      • எம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு ?
      • சிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...
      • இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை
      • லிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...
      • முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர்
      • ஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...
      • அட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்
      • ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...
      • 26 ஆண்டு சிறை! கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...
      • அதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி! விஜயகாந்த், ...
      • ரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை
      • விபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது
      • பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...
      • என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...!!
      • மோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...
      • ஆமீர்கானை முந்திய ரஜினி!
      • கிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...
      • ''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...
      • சூர்யா படத்தில் இருந்து விலகினார்...?
      • மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்! காங...
      • திரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்
      • எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?
      • கபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்
      • அமெரிக்காவை விஞ்சியது இந்தியா!!
      • முத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்
      • சல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா
      • பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?
      • ஒரே படத்தில் பல கதைகள்
      • இன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...
      • புது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா
      • நித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...
      • தைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...
      • சீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...
      • பிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...
      • ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?
      • லிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை!
      • ஜெயலலிதா இல்லை பயம் போச்சு! சட்டப்பேரவைக்கு வர கரு...
      • மோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...
      • புதுப் பிரச்னையில் 'லிங்கா'!
      • அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எதிரொலி! மேயர் சைதை...
      • அன்று விஜய் இன்று விக்ரம்
      • இப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...
      • முதல் முறையாக கௌதம் மேனன்! இரண்டாவது முறையாக ஷங்கர்!!
      • அ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை?...
      • சூர்யா படத்தில் மூன்று நாயகிகள்!
      • தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?
      • லிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )
      • லிங்காவில் அனுஷ்காவா சோனாக்ஷியா
      • கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...
      • அனேகன் படத்தின் கதை!
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.