விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, November 26, 2014

    பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?

    இன்று (புதன்கிழமை) விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு 60–வது பிறந்தநாள். அதாவது அவருக்கு இது மணிவிழா ஆண்டு.

    வழக்கமாகவே நவம்பர் மாத கடைசி என்பது ஈழத்தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் உணர்ச்சி பூர்வமாக கொண்டாடும் நாட்களாக அமையும். நவம்பர் 27-ம் தேதி புலிகள் அமைப்பின் முதல் களப்போராளியான கேப்டன் சங்கர் மரணம் அடைந்த நாள். அதற்கு முந்தைய நாள் நவம்பர் 26 பிரபாகரன் பிறந்தநாள்.

    எனவே, 25,26,27 ஆகிய மூன்று நாட்களையும் மாவீரர் தினங்களாக விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டாடும். தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பிரபாகரன், நவம்பர் 27–ந்தேதிதான் வானொலியில் பேசுவார்.

    அதற்காக உலகம் முழுவதும் தமிழர்கள் அந்த நாளுக்காக காத்திருப்பார்கள். 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு, புலிகளின் வானொலி செயல்படவில்லை. அதனால் மாவீரர் தின உரைகளும் இடம்பெறவில்லை.

    ‘பிரபாகரன் போரில் கொல்லப்பட்டார்’ என்று இலங்கை அரசாங்கமும், ‘இல்லை, அவர் உயிர் வாழ்கிறார்’ என்று ஈழ ஆதரவாளர்களும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும் பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் தின கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.

    1954–ம் ஆண்டு வேலுப்பிள்ளைபார்வதி தம்பதியருக்கு வல்வெட்டித்துறையில் பிறந்தவர் பிரபாகரன். அவருக்கு இன்று 60–வது பிறந்த நாள். மணிவிழா பிறந்தநாளாக அதனை கொண்டாடி வருகிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.

    ‘‘வானவெளியில் வாண வேடிக்கைகள் நடக்கட்டும்... பட்டாசு வெடிகள் முழங்கட்டும்; சர்க்கரை பொங்கல் வழங்கப்படட்டும்; ஆலயங்கள், வழிபாட்டு தலங்களுக்கு செல்கின்றவர்கள் பூசை நடத்தட்டும்.

    பிரபாகரன் என்ற பெயரை உச்சரித்தாலே மான தமிழனின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாயுமல்லவா? பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் தமிழர்கள் எழுப்பும் வாழ்த்து முழக்கம் விண்ணை முட்டட்டும். சுதந்திர தமிழ் ஈழ விடியலுக்கு கட்டியம் கூறும் விதத்தில் தாய் தமிழகத்திலும், உலகம் எங்கிலும் தமிழர்கள் தமிழ்க்குல தலைவனின் பிறந்தநாளை கொண்டாடுங்கள்’ என்று பகீரங்கமாகவே அழைப்பு விடுத்துள்ளார் வைகோ.

    ‘காலம் தந்த தலைவன் மேதகு பிரபாகரன் 60’ என்ற தலைப்பில் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 26, 27 ஆகிய தேதிகளில் (இன்றும், நாளையும்) இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார் பழ.நெடுமாறன். ஒருவார கால நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது சீமானின் நாம் தமிழர் கட்சி.

    இன்னும் பல தமிழர் இயக்கங்கள் விழாக்களை திட்டமிட்டு வருகின்றன. ஈழத்தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளார்கள். அவர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கிறது.

    இப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி... பிரபாகரன் என்ன ஆனார்? அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதே அந்த கேள்வி.

    2009ம் ஆண்டு மே மாதம் அது. இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதி. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதிகட்ட போர் உச்சத்தில் இருந்தது.

    அந்தப்போரில் விடுதலைப்புலிகள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது. விடுதலை புலிகள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உட்பட அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது.

    அத்துடன் அவர்கள் பிணமாக இருக்கும் படங்களையும் வெளியிட்டனர். அந்த நேரத்தில் பிரபாகரனை பற்றி மட்டும் எந்த தகவலும் வெளிவரவில்லை.

    மறுநாள், பிரபாகரன், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடல் புலிகள் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவிக்க... உலக தமிழர்கள் அனைவரும் செய்வதறியாது கலங்கி நின்றனர். பிரபாகரனின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு வீடியோவையும், புகைப்படங்களையும் ராணுவம் வெளியிட்டது.

    அந்த வீடியோவிலும் புகைப்படத்திலும் இருந்தவரின் உடல் அமைப்பும், பிரபாகரனின் உடல் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தன. ஆனால், பல்வேறு தமிழ் அமைப்புகள் அது பிரபாகரன் இல்லை என்று மறுத்தன.

    ‘‘போர்க்களத்தில் இருந்த ஒருவர் முகத்தை சுத்தமாக சேவ் செய்து இருக்க முடியுமா? அவரது சீருடையில் இருக்கும் படமும் உள்ளாடை மட்டும் அணிந்த படமும் உண்மையானதாக இல்லை’’ என்றும் அவர்கள் சந்தேகங்களை கிளப்பினார்கள்.

    அன்றைய காங்கிரஸ் அரசு பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்டு விண்ணப்பம் செய்தது. ஆனால் அதனை இலங்கை அரசு தரவில்லை. ‘பிரபாகரனை உடனடியாக எரித்து அவரது சாம்பலை கடலில் கரைத்து விட்டோம்’ என்று சிங்கள அதிகாரிகள் சொன்னார்கள்.

    ஐந்து ஆண்டுகள் ஆகியும் பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை இதுவரை இலங்கை அரசு மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை. கொல்லப்பட்டது பிரபாகரன் என்று பிரகடனம் செய்யும் ராஜபக்சே அரசு, ஏன் இதுவரை அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கொடுக்கவில்லை என்று கேட்கும் யாருக்கும் எந்த பதிலும் இல்லை.

    ‘தலைவர் இறந்தால்தானே அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கொடுக்க முடியும். அவர் இறக்கவில்லை... இருக்கிறார்!’ என்று பதிலடி கொடுக்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். ‘‘பிரபாகரனின் அப்பா, அம்மா ஆகிய இருவரும் முகாமில்தான் இருந்தார்கள். அவர்களை வைத்து பிரபாகரனின் உடலை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும்’’ என்று சொன்னதற்கும் இலங்கையிடம் இருந்து பதில் இல்லை.

    இந்தியாவில் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தடையை நீட்டித்து கொண்டே இருப்பார்கள். காங்கிரஸ் ஆட்சி முடியும் போது, ஐந்து ஆண்டுக்கு தடை செய்துவிட்டார்கள்.

    இந்த தடைக்கான காரணங்களில் ஒன்றாக, ‘விடுதலை புலிகள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அவர்கள் தமிழீழத்தையும் தமிழகத்தையும் சேர்த்து ஒரே நாடாக ஆக்குவதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வந்தார்கள்’ என்று காரணம் சொல்லப்படுகிறது.

    2009–ல் அழிக்கப்பட்ட இயக்கத்துக்கு 2018 வரைக்கும் தடைவிதிக்க காரணமே பிரபாகரன், பொட்டு அம்மான் பற்றிய சந்தேகங்கள் தான் என்றும் சொல்லப்படுகிறது. ‘விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னும் செயல்பாட்டில் இருக்கிறது’ என்று ராஜபக்சே சமீபத்தில் விடுத்த அறிவிப்பும் இதனை வைத்துத்தான். இறுதிக்கட்ட போர் முடிவில் கைது செய்யப்பட்ட முக்கிய போராளிகளை இன்னமும் விசாரணையே இல்லாமல் இலங்கை அரசு சிறையில் வைத்துள்ளதற்கு காரணமாகவும் இது சொல்லப்படுகிறது.

    முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப்போரின் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சாவூரில் பழ.நெடுமாறன் முயற்சியால் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை அமைத்தனர். இந்த நினைவு முற்றத்தில் போரில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இறந்தவர்களைப் பற்றிய குறிப்புகளும் இங்கே உள்ளது.

    அதில் பிரபாகரன் படம் வைக்கப்படவில்லை. ‘’பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் கொல்லப்பட்டார் என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள். அதன் பிறகு நான் என் பதிலை சொல்வேன்’’ என்று நெடுமாறனும் சொல்லி வருகிறார்.

    ‘‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எப்படி சொல்லி வருகிறீர்கள்?’’ என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து நெடுமாறனை கேட்டுவிட்டு செல்கிறார்கள். ‘‘இது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது’’ என்று அவரும் அவர்களுக்கு பதில் அளித்து வருகிறார்.

    இப்படி இலங்கை அரசு, மத்திய அரசு, புலம் பெயர் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் அனைவருக்கும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது இன்னும் விலகாத மர்மமாகவே இருக்கிறது. பிரபாகரன் தனது வழிகாட்டியாக சொன்னது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை.

    ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீர வேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதை தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பியவர் நேதாஜி. எல்லோருக்கும் பிறந்தநாள் என்று ஒன்று வந்தால், நிச்சயம் இறந்த நாளும் என்றாவது ஒருநாள் வரும்.


    ஆனால், இறந்தநாள் என்பது மர்ம நாளாகவே இருப்பது நேதாஜிக்கு அடுத்து பிரபாகரனுக்குத்தான். அந்த மர்ம முடிச்சுக்கு எப்போது விடை கிடைக்குமோ தெரியவில்லை!


    Posted by விழியே பேசு... at 5:20 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ▼  November (469)
      • முத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு
      • வைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...
      • வைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக
      • லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை!
      • லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்
      • லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!
      • தமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்
      • நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்
      • கிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்
      • மீண்டும் ஏமாற்றிய சிம்பு
      • இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...
      • பாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி
      • சொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு
      • பிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை
      • யாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்? - லிங்கா சிறப்புத்...
      • விஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்!
      • முதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...
      • கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!
      • அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா
      • கமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்
      • அதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...
      • 29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை
      • விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...
      • விசிடி ரெய்டில் விளம்பரம்!
      • ஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்
      • சினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...
      • குஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி
      • சாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியாம்!
      • தனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி!
      • ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை
      • பிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகோ
      • உயிருக்கு போராடுகிறேனா...? பிரபல நடிகை விளாசல்
      • எதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...
      • ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...
      • ஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா
      • சோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா
      • பவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி
      • சிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது
      • ஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு
      • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....
      • பெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...
      • எனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...
      • நடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்! வெல்வ...
      • பார்த்திபன் மீது கடுப்பு ....
      • வறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...
      • மரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...
      • தமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...
      • உனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...
      • 'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...
      • நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...
      • எம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு ?
      • சிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...
      • இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை
      • லிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...
      • முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர்
      • ஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...
      • அட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்
      • ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...
      • 26 ஆண்டு சிறை! கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...
      • அதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி! விஜயகாந்த், ...
      • ரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை
      • விபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது
      • பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...
      • என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...!!
      • மோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...
      • ஆமீர்கானை முந்திய ரஜினி!
      • கிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...
      • ''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...
      • சூர்யா படத்தில் இருந்து விலகினார்...?
      • மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்! காங...
      • திரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்
      • எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?
      • கபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்
      • அமெரிக்காவை விஞ்சியது இந்தியா!!
      • முத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்
      • சல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா
      • பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?
      • ஒரே படத்தில் பல கதைகள்
      • இன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...
      • புது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா
      • நித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...
      • தைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...
      • சீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...
      • பிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...
      • ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?
      • லிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை!
      • ஜெயலலிதா இல்லை பயம் போச்சு! சட்டப்பேரவைக்கு வர கரு...
      • மோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...
      • புதுப் பிரச்னையில் 'லிங்கா'!
      • அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எதிரொலி! மேயர் சைதை...
      • அன்று விஜய் இன்று விக்ரம்
      • இப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...
      • முதல் முறையாக கௌதம் மேனன்! இரண்டாவது முறையாக ஷங்கர்!!
      • அ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை?...
      • சூர்யா படத்தில் மூன்று நாயகிகள்!
      • தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?
      • லிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )
      • லிங்காவில் அனுஷ்காவா சோனாக்ஷியா
      • கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...
      • அனேகன் படத்தின் கதை!
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.