விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, November 25, 2014

    தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?

    தமிழக - கேரளா எல்லையில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியுள்ளதாக மத்திய உளவுத்துறை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கு நிலையில், திருப்பூரில் தனியார் பனியன் ஆலை ஒன்றில் கடைநிலைத் தொழிலாளியாக பணியாற்றி வந்த மேகாலயா நக்சல்கள் இருவரை கைது செய்துள்ளது அம்மாநில காவல்துறை. 

    இந்த இருவரில் ஒருவரான வில்லியம் ஏ.சங்மா என்பவர், மேகாலயாவில் உள்ள 'ஆச்சிக் நேஷனல் கோஆபரேடிவ் ஆர்மி'' (ஏ.என்.சி.ஏ.) என்ற அமைப்பின் தலைவர் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். மற்றொருவரான அலாஸ் ஆர்.சங்மாவும் போராளிக்குழுவைச் சேர்ந்தவர்தான். இவர்கள் இருவரையும் கைது செய்த மேகலயா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், அவர்களை திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேகலயா அழைத்து சென்றனர்.

    தீவிரவாதிகளின் கூடாரமாகிறதா திருப்பூர்?

    தொழிலாளிகள் போர்வையில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது திருப்பூர், கோவைக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2006 ஆம் ஆண்டு திருப்பூர், போயம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த தர்மபுரியைச் சேர்ந்த நக்சல் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    2007 ஆம் ஆண்டு தமிழக நக்சல் இயக்கத் தலைவர் சுந்தரமூர்த்தி அவரது ஆதரவாளர்களுடன் பிச்சம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கும்பலை கைது செய்த க்யூ பிரிவு போலீசார், துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

    அதே 2007 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலி அமைப்புக்கு இரும்பு பால்ரஸ் குண்டுகளை சப்ளை செய்ததாக விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவற்றோடு திருப்பூரில் குப்பையில் கிடந்த சக்தி வாய்ந்த பைப் பாம், வாடகை வீட்டில் தங்கியிருந்த வெடிகுண்டு சிதறி பலியான சம்பவம் உள்ளிட்ட வெடிகுண்டுகள், வெடிபொருட்கள் சார்ந்த பல வழக்குகளுக்கான பின்புலம் இன்னும் கண்டறியப்படவில்லை.


    எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக கோவை, பீளமேட்டில் ஒரு ஆலையில் சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வந்த, மிக முக்கிய மாவோயிஸ்ட் தீவிரவாதியான ஷ்யாம் சரண் டுடூவை மேற்கு வங்க போலீசார் கடந்த ஆண்டு கோவையில் வைத்து கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் எல்லை படை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி, 24 ஜவான்களை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி இவர். இப்படியாக பல சம்பவங்கள் திருப்பூர், கோவையில் அரங்கேறி வருகிறது. இதன் தொடர்ச்சி தான் மேகலயா தீவிரவாதிகள் சிக்கியிருப்பது.

    திருப்பூரில் ஏன்?



    திருப்பூரில் தீவிரவாதிகள் பதுங்க முக்கிய காரணம் நெருக்கடி மிகுந்த தொழில் நகரம் என்பதுதான். திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கணிசமானோர் வடமாநில தொழிலாளர்கள். நெருக்கடி மிகுந்த குடியிருப்பு பகுதிகள் நிறைந்த நகரம் என்பதாலும், இடம்பெயரும் மக்கள் என்பதாலும் திருப்பூர்,  பயங்கரவாதிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழ வழி வகுக்கிறது.

    வெவ்வேறு ஊர்களில் கொலை, கொள்ளை செய்பவர்கள் துவங்கி, மிகப்பெரிய தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் வரை திருப்பூரில் தங்கியிருந்தால் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாது என்பது தான் நிலை. அதனாலே தங்கள் அடையாளங்களை மறைத்து தலைமறைவு வாழ்க்கையை வாழ சமூக விரோதிகளும், பயங்கரவாதிகளும் திருப்பூரை தேர்வு செய்து வருகின்றனர்.

    திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக இப்படியான நிலைமை நீடிப்பதால், தொழிலாளர்களை வரைமுறைப்படுத்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. தொழிலாளர்கள் பெரும்பாலானோர் நிரந்தரமாய் பணியாற்றுவதில்லை என்பதும், அடையாள அட்டை வழங்கினால் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டியது அவசியமாய்விடும் என்பதாலும் நிறுவனங்கள் அடையாள அட்டை வழங்க மறுத்து வருகின்றன.

    வெளிநாட்டினர் விவரமே போலீசாரிடம் இல்லை


    திருப்பூரில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் சுமார் 400 பேர் தங்கியிருக்க கூடும் என சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களைப்பற்றிய அடிப்படை விவரங்கள் கூட காவல்துறையிடம் இல்லை. அப்படி இருக்க லட்சத்தை தொட்டு விட்ட வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களும், லட்சக்கணக்கில் உள்ள தொழிலாளர்களின் விவரங்களும் போலீசிடம் இருக்க வாய்ப்பே இல்லை.

    ஒவ்வொரு முறை இது போன்ற பிரச்னை எழும் போது, வெளிநாட்டவர், வெளிமாநிலத்தவர், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்களை போலீசார் சேகரிக்க துவங்குவதும், பின்னர் அது பாதியில் நின்று விடுவதும் இன்றளவிலும் தொடர்ந்து வருகிறது.

    இது தொடர்பாக திருப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "தொழிலாளர்களின் விவரங்களை முழுமையாக பெற்றுக்கொண்டு அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதேபோல் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறி, நிறுவனங்கள் இதனை அமல்படுத்த மறுக்கின்றன.

    நிறுவனங்கள் குறைந்தபட்சம் தொழிலாளர்களின் புகைப்படம், முகவரி, அடையாள சான்று போன்றவற்றையாவது பெறலாம். ஆனால் அதை கூட நிறுவனங்கள் பெறுவதில்லை. தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க புதிய முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்," என்றார்.

    மிகப்பெரிய தொழில் நகரமான திருப்பூர், வளர்ந்து வரும் நகரமாகவும் இருந்து வருகிறது. இந்த சூழலில் தொழிலாளர்கள் போர்வையில் சமூக விரோதிகளும், போலீசாரால் தேடப்பட்டு வருபவர்களும் இங்கு பதுங்குவது தொழிலுக்கும், வளர்ச்சிக்கும் நிச்சயம் நன்மை பயக்காது.


    காவல்துறை கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது!



    மேலும் .....


    எனது திட்டங்களை மோடி காப்பியடித்துவிட்டார் - முலாயம் சிங் குற்றச்சாட்டு



    பேசிய சம்பளத்தைக் கொடுக்க மாட்டேங்கறாங்களே...:ஸ்ருதிஹாஸன்


    விக்ரம் உருவில் அஜித்துக்கு வந்த மிக பெரிய சோதனை !


    சூர்யா, விக்ரம் கே.குமார் படத்தின் பஸ்ட் லுக்


    கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தை ஜப்பான் நிறுவனம் கட்டுகிறது! (போட்டோகள் )


    சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு போடும் புது கணக்கு



    ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியை குவித்து ரஜினியின் லிங்கா சாதனை


    விஜய் ரசிகர்களின் அஜித் பாசம்



    வருண் ஆரோன் வேகத்தில் அசந்து போன ஆஸ்திரேலியர்கள்


    காவியத் தலைவன் படத்துக்கு வரிவிலக்கு


    முத்த போராட்டக்காரர்கள் மீது வன்முறை கூடாது: பெங்களூரு காவல் ஆணையர் எச்சரிக்கை


    அனேகன் படத்தின் கதை!


    கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போராடி வரும் ஆஸி வீரர்(வீடியோ)


    லிங்காவில் அனுஷ்காவா சோனாக்ஷியா


    லிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )


    தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?



    Posted by விழியே பேசு... at 11:43 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ▼  November (469)
      • முத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு
      • வைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...
      • வைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக
      • லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை!
      • லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்
      • லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!
      • தமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்
      • நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்
      • கிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்
      • மீண்டும் ஏமாற்றிய சிம்பு
      • இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...
      • பாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி
      • சொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு
      • பிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை
      • யாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்? - லிங்கா சிறப்புத்...
      • விஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்!
      • முதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...
      • கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!
      • அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா
      • கமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்
      • அதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...
      • 29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை
      • விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...
      • விசிடி ரெய்டில் விளம்பரம்!
      • ஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்
      • சினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...
      • குஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி
      • சாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியாம்!
      • தனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி!
      • ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை
      • பிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகோ
      • உயிருக்கு போராடுகிறேனா...? பிரபல நடிகை விளாசல்
      • எதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...
      • ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...
      • ஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா
      • சோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா
      • பவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி
      • சிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது
      • ஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு
      • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....
      • பெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...
      • எனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...
      • நடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்! வெல்வ...
      • பார்த்திபன் மீது கடுப்பு ....
      • வறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...
      • மரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...
      • தமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...
      • உனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...
      • 'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...
      • நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...
      • எம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு ?
      • சிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...
      • இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை
      • லிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...
      • முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர்
      • ஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...
      • அட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்
      • ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...
      • 26 ஆண்டு சிறை! கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...
      • அதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி! விஜயகாந்த், ...
      • ரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை
      • விபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது
      • பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...
      • என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...!!
      • மோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...
      • ஆமீர்கானை முந்திய ரஜினி!
      • கிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...
      • ''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...
      • சூர்யா படத்தில் இருந்து விலகினார்...?
      • மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்! காங...
      • திரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்
      • எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?
      • கபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்
      • அமெரிக்காவை விஞ்சியது இந்தியா!!
      • முத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்
      • சல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா
      • பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?
      • ஒரே படத்தில் பல கதைகள்
      • இன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...
      • புது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா
      • நித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...
      • தைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...
      • சீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...
      • பிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...
      • ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?
      • லிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை!
      • ஜெயலலிதா இல்லை பயம் போச்சு! சட்டப்பேரவைக்கு வர கரு...
      • மோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...
      • புதுப் பிரச்னையில் 'லிங்கா'!
      • அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எதிரொலி! மேயர் சைதை...
      • அன்று விஜய் இன்று விக்ரம்
      • இப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...
      • முதல் முறையாக கௌதம் மேனன்! இரண்டாவது முறையாக ஷங்கர்!!
      • அ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை?...
      • சூர்யா படத்தில் மூன்று நாயகிகள்!
      • தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?
      • லிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )
      • லிங்காவில் அனுஷ்காவா சோனாக்ஷியா
      • கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...
      • அனேகன் படத்தின் கதை!
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.