பாஞ்சாப் மாநிலத்தில் 500 ரூபாய் காணாமல் போனதற்காக வகுப்பு மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார் ஆசிரியை ஒருவர்.
இந்த சம்பவத்தால் கொதித்து போன பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவிக்கவே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றுபவர் ஹர்ஜித்கவுர்.
இவர், 7 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் காணாமல் போயுள்ளது. அந்த பணத்தை வகுப்பு மாணவிகளில் யாரோ தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட ஹர்ஜித்கவுர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
ஆனால், அந்த பணத்தை தாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று மாணவிகள் மறுத்தனர். ஆனாலும் அதை விடாத ஆசிரியை 13 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த மாணவிகள் இதுபற்றி தங்களது பெற்றோரிடம் கூறி அழுதனர். இதில் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதைக்கேள்விப்பட்ட உடன் அந்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் ஹர்ஜித் கவுரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் கொதித்து போன பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவிக்கவே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றுபவர் ஹர்ஜித்கவுர்.
இவர், 7 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் காணாமல் போயுள்ளது. அந்த பணத்தை வகுப்பு மாணவிகளில் யாரோ தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட ஹர்ஜித்கவுர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
ஆனால், அந்த பணத்தை தாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று மாணவிகள் மறுத்தனர். ஆனாலும் அதை விடாத ஆசிரியை 13 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த மாணவிகள் இதுபற்றி தங்களது பெற்றோரிடம் கூறி அழுதனர். இதில் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதைக்கேள்விப்பட்ட உடன் அந்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் ஹர்ஜித் கவுரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment