தமிழ் அறிஞர்களுக்கான விருது பெறுவோர் பட்டியலை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது, தந்தைபெரியார் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதன்படி, திருவள்ளுவர் விருதுக்கு திருக்குறள் க.பாஸ்கரனும், தந்தை பெரியார் விருதுக்கு டாக்டர் தாவூஜீ குப்தாவும், அம்பேத்கர் விருதுக்கு ஆழி.க.மகாலிங்கமும், அண்ணா விருதுக்கு கஸ்தூரி ராஜாவும், காமராஜர் விருதுக்கு கருமுத்து தி.கண்ணனும், பாரதியார் விருதுக்கு முனைவர் இளசை சுந்தரமும், பாரதிதாசன் விருதுக்கு கவிஞர் கண்மதியனும், திரு.வி.க. விருதுக்கு முனைவர் கரு.நாகராசனும், கி.ஆ.பெ.விசுவநாதம் விருதுக்கு பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான விருதுகளை 16.01.2015 அன்று பிற்பகல் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
விருது பெறுவோருக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது, தந்தைபெரியார் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதன்படி, திருவள்ளுவர் விருதுக்கு திருக்குறள் க.பாஸ்கரனும், தந்தை பெரியார் விருதுக்கு டாக்டர் தாவூஜீ குப்தாவும், அம்பேத்கர் விருதுக்கு ஆழி.க.மகாலிங்கமும், அண்ணா விருதுக்கு கஸ்தூரி ராஜாவும், காமராஜர் விருதுக்கு கருமுத்து தி.கண்ணனும், பாரதியார் விருதுக்கு முனைவர் இளசை சுந்தரமும், பாரதிதாசன் விருதுக்கு கவிஞர் கண்மதியனும், திரு.வி.க. விருதுக்கு முனைவர் கரு.நாகராசனும், கி.ஆ.பெ.விசுவநாதம் விருதுக்கு பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான விருதுகளை 16.01.2015 அன்று பிற்பகல் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
விருது பெறுவோருக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment