இந்துக்கள் மனது வைத்தால் விழிஞ்ஞம் துறைமுகத்தைக் கொண்டுவரமுடியும் என்ற நடிகர் சுரேஷ் கோபியின் பேச்சுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. சமீபத்தில் வெளியான் ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க கேரள அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த துறைமுகத் திட்டத்தைத் தொடங்க கோரி திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
அதில் நடிகர் சுரேஷ் கோபியும் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது, ‘இந்துக்கள் அனைவரும் மனது வைத்தால் விழிஞ்ஞம் துறைமுகத்தைக் கொண்டுவரமுடியும்’ என்றார்.
இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சுரேஷ்கோபி கேரளாவின் தொகாடியாவாக மாறிவிட்டார் என்று கூறியுள்ளன.
இதற்கு பதிலளித்துள்ள சுரேஷ்கோபி, ‘நான் சொன்னதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. சமீபத்தில் வெளியான் ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க கேரள அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த துறைமுகத் திட்டத்தைத் தொடங்க கோரி திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
அதில் நடிகர் சுரேஷ் கோபியும் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது, ‘இந்துக்கள் அனைவரும் மனது வைத்தால் விழிஞ்ஞம் துறைமுகத்தைக் கொண்டுவரமுடியும்’ என்றார்.
இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சுரேஷ்கோபி கேரளாவின் தொகாடியாவாக மாறிவிட்டார் என்று கூறியுள்ளன.
இதற்கு பதிலளித்துள்ள சுரேஷ்கோபி, ‘நான் சொன்னதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment