நாமக்கல் அருகேயுள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆங்கில ஆசிரியை 2 பேருக்கு இடையே யார் அழகாக இருக்கிறோம் என்பதில் பெரும் போட்டியே நிலவுகிறதாக கூறப்படுகிறது. இருவரும் உடை, மேக்கப் விஷயத்தில் காட்டும் கவனமும், இது தொடர்பாக மற்றவர்களிடையே விவாதிப்பதும் சக ஆசிரியைகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் உச்சகட்டமாக தகராறில் ஈடுபட்ட ஆசிரியை ஒருவர் மரபுக்கு மாறாக உடையணிந்து வந்தது குறித்து தலைமையாசிரியை கண்டித்துள்ளார்.
பள்ளிக்கு சேலை தான் உடுத்தி வரவேண்டும். அது தான் சிறந்த நாகரிகம். இதையே அனைவரும் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தினார். இதற்கு, அந்த ஆசிரியை தினமும் பட்டுச்சேலையுடன் பள்ளிக்கு வருவது மட்டும் நாகரிகமா எனக் கேட்டு தனக்கு போட்டியாக கருதும் மற்றொரு ஆசிரியை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். இதில் தலைமையாசிரியை முன்பே இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவரும் ஆங்கிலத்தில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டதை பார்த்த சக ஆசிரிய, ஆசிரியைகள் இருவரையும் கண்டித்துள்ளனர். இரு ஆசிரியைகள் செயல்பாடு தொடர்பாக பள்ளி தலைமையாசிரியை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.
இது குறித்து அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், கிராமப்புற பள்ளி குழந்தைகளின் தேர்ச்சி நிலையை அறிந்து பாடத்தில் கவனம் செலுத்துவதற்கு பதில் இதுபோன்ற உடை, மேக்கப் போன்ற விவகாரத்தில் போட்டி நிலவுவது வேதனையாக உள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று இருவரையும் கண்டிக்க அறிவுறுத்தியுள்ளோம்ÕÕ என்றார்
பள்ளிக்கு சேலை தான் உடுத்தி வரவேண்டும். அது தான் சிறந்த நாகரிகம். இதையே அனைவரும் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தினார். இதற்கு, அந்த ஆசிரியை தினமும் பட்டுச்சேலையுடன் பள்ளிக்கு வருவது மட்டும் நாகரிகமா எனக் கேட்டு தனக்கு போட்டியாக கருதும் மற்றொரு ஆசிரியை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். இதில் தலைமையாசிரியை முன்பே இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவரும் ஆங்கிலத்தில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டதை பார்த்த சக ஆசிரிய, ஆசிரியைகள் இருவரையும் கண்டித்துள்ளனர். இரு ஆசிரியைகள் செயல்பாடு தொடர்பாக பள்ளி தலைமையாசிரியை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.
இது குறித்து அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், கிராமப்புற பள்ளி குழந்தைகளின் தேர்ச்சி நிலையை அறிந்து பாடத்தில் கவனம் செலுத்துவதற்கு பதில் இதுபோன்ற உடை, மேக்கப் போன்ற விவகாரத்தில் போட்டி நிலவுவது வேதனையாக உள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று இருவரையும் கண்டிக்க அறிவுறுத்தியுள்ளோம்ÕÕ என்றார்
No comments:
Post a Comment