சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ஃபேன்டஸி திரைப்படத்திற்கு புலி என பெயரிடப்பட்டுள்ளது. விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், ஹன்ஸிகா மோத்வானியும் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், தம்பி ராமய்யா, கருணாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பது நடப்பதுபோலவே இல்லையாம் புலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட். குடும்பத்துடன் ஊர்த்திழுவிழாவிற்கு வந்திருப்பதைப் போல கலகலப்பாக ஷூட்டிங் சென்றுகொண்டிருப்பதாக சிலாகிக்கின்றனர் படக்குழுவினர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய்யையும், ஸ்ருதிஹாசனையும் ஒரு பாடல் பாடவைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் புலி படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
இதுகுறித்து பேசுகையில் தேவி ஸ்ரீபிரசாத் “புலி படம் ஒரு ஃபென்டஸி படம் என்பதால், அதில் கமெர்ஷியல் கலவைகள் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம். எதையும் தாங்கும் சக்தி புலி படத்தின் கதைக்கு இருக்கிறது. நான் பல புது இசைகளை பாடல்களில் சேர்த்து வருகிறேன். சிறந்த பாடகர்களான விஜய்யையும், ஸ்ருதி ஹாசனையும் இந்த படத்தில் பாட வைக்கப்போகிறேன்” என்றும் கூறியிருக்கிறாராம்.
புலி படத்தில் ஸ்ருதிஹாசனை ஓகே செய்ததிலிருந்தே இருவரையும் திரையில் காண ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, விஜய்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக ஆடுவதோடு பாடுவதையும் கேட்கப்போவது மிகப்பெரிய கொண்டாட்டம் தான்.
படப்பிடிப்பது நடப்பதுபோலவே இல்லையாம் புலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட். குடும்பத்துடன் ஊர்த்திழுவிழாவிற்கு வந்திருப்பதைப் போல கலகலப்பாக ஷூட்டிங் சென்றுகொண்டிருப்பதாக சிலாகிக்கின்றனர் படக்குழுவினர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய்யையும், ஸ்ருதிஹாசனையும் ஒரு பாடல் பாடவைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் புலி படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
இதுகுறித்து பேசுகையில் தேவி ஸ்ரீபிரசாத் “புலி படம் ஒரு ஃபென்டஸி படம் என்பதால், அதில் கமெர்ஷியல் கலவைகள் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம். எதையும் தாங்கும் சக்தி புலி படத்தின் கதைக்கு இருக்கிறது. நான் பல புது இசைகளை பாடல்களில் சேர்த்து வருகிறேன். சிறந்த பாடகர்களான விஜய்யையும், ஸ்ருதி ஹாசனையும் இந்த படத்தில் பாட வைக்கப்போகிறேன்” என்றும் கூறியிருக்கிறாராம்.
புலி படத்தில் ஸ்ருதிஹாசனை ஓகே செய்ததிலிருந்தே இருவரையும் திரையில் காண ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, விஜய்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக ஆடுவதோடு பாடுவதையும் கேட்கப்போவது மிகப்பெரிய கொண்டாட்டம் தான்.
No comments:
Post a Comment