கம்போடியாவில் மருத்துவர் ஒருவர் பயன்படுத்திய, கிருமிகள் படிந்த ஊசி உள்ளிட்ட உபகரணங்களால் சுமார் 200 பேருக்கு எச்ஐவி நோய் ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. கம்போடியாவில், ரோகா என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக எச்ஐவி தொற்று ஏற்பட்டது கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் எச்ஐவி தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியக் கூடிய சோதனை இரண்டாயிரம் பேரிடம் நடத்தப்பட்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. யேம் செரின் என்ற உள்ளூர் மருத்துவர் ஊசிகளையும், ஊசி மருந்தை ஏற்றும் குடுவைகளையும் பல்வேறு நோயாளர்களிடம் மீண்டும் மீண்டும் உபயோகித்துள்ளார்.
இதனால், அந்த கிராமத்தை சேர்ந்த 200 பேருக்கு எச்ஐவி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவரும் இதனை ஒப்புக்கொண்டுள்ள இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் பின்னர் எச்ஐவி தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியக் கூடிய சோதனை இரண்டாயிரம் பேரிடம் நடத்தப்பட்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. யேம் செரின் என்ற உள்ளூர் மருத்துவர் ஊசிகளையும், ஊசி மருந்தை ஏற்றும் குடுவைகளையும் பல்வேறு நோயாளர்களிடம் மீண்டும் மீண்டும் உபயோகித்துள்ளார்.
இதனால், அந்த கிராமத்தை சேர்ந்த 200 பேருக்கு எச்ஐவி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவரும் இதனை ஒப்புக்கொண்டுள்ள இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment