ஊழலுக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள் நடத்திய அன்னா ஹசாரேவுக்கு, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி உறுதுணையாக இருந்தார். இந்தநிலையில், கிரண் பேடி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து உள்ளார்.
இதுபற்றி அன்னா ஹசாரே, தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் நிருபர்களிடம் கருத்து கூறினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கிரண் பேடி பா.ஜனதா கட்சியில் சேர்வதற்கு முன்பு என்னுடன் கலந்து ஆலோசிக்கவில்லை’’ என்றார்.
மேலும், அவர் உங்களுடன் தொடர்பில் இருக்கிறாரா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஊழலுக்கான எதிரான எனது கடைசி போராட்டம் முடிவடைந்த பிறகு, கிரண் பேடி ராலேகான் சித்தி வரவில்லை. தற்போது, அவர் என்னுடன் தொடர்பிலும் இல்லை’’ என்று அன்னா ஹசாரே பதிலளித்தார்.
No comments:
Post a Comment