விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, March 12, 2012

    பிரபாகரனின் இளைய மகன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிடி 14-ந் தேதி ஒளிபரப்பாகிறது


    இலங்கையில் இறுதிக் கட்ட இனப்போரின் போது சரண் அடைந்தவர்களையும், கைதானவர்களையும் இலங்கை ராணுவம் திட்டமிட்டு சுட்டுக் கொலை செய்யும் வீடியோ காட்சியை இங்கிலாந்து செய்தி நிறுவனம் நாளை மறுநாள் வெளியிட உள்ளது. இது சர்வதேச அளவில் இலங்கைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் பல ஆண்டுகளாக நடந்து வந்த இனப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட சண்டையின் போது நிறைய போர்க் குற்றங்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

    போர் விதிகளை மீறி சரண் அடைந்தவர்களையும், கைது செய்யப்பட்டவர்களையும், சிறுவர்களையும் போர் நீதிக்குப் புறம்பாக அவர்களின் கைகளையும், கண்களையும் கட்டி சுட்டுக் கொன்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    இதற்கு ஆதாரமாக இங்கிலாந்தை சேர்ந்த 'சேனல் 4' செய்தி நிறுவனம் சரணடைந்த விடுதலைப் புலிகளை சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சியை இலங்கை அரசு மறுத்தது.

    பொய்யான, நவீன முறையில் தயாரிக்கப்பட்ட போலியான வீடியோ காட்சி அது என்று இலங்கை அரசு கூறியது. சேனல் 4 செய்தி நிறுவனம் தவிர, இறுதிக்கட்ட போரின்போது போர்ப்பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உதவச்சென்ற சர்வதேச குழுக்களும் போர்க்குற்றம் நடந்ததை ஒப்புக் கொண்டன.

    எனினும் இந்தியா போன்ற அண்டை நாடுகளின் நெருக்கடி இல்லாததால் அதிபர் ராஜபக்சே சர்வதேச அமைப்பின் விசாரணையில் இருந்து தப்பி வந்தார். இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

    சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரிலும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 19-வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 7-ந்தேதி 'நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்த பரிந்துரைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டும்' என்று வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

    போர்க்குற்றங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் தீர்மானத்தின் ஒரு அம்சம் ஆகும். வரும் 23-ந்தேதி இந்த தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கிறது. இந்த தீர்மானம் வெற்றி பெற்றால், சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த தீர்மானத்துக்கு எதிராக நாடுகளை தனது அணியில் திரட்டும் வேலையில் இலங்கை அரசு முழு வீச்சில் இறங்கி உள்ளது.

    அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுத்துள்ளன. ஆனால் தீர்மானம் குறித்த இந்தியாவின் நிலை பற்றி இதுவரை தெளிவுபடுத்தப் படவில்லை.

    இலங்கை நடத்திய போர்க் குற்றங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய 'சேனல் 4' செய்தி நிறுவனம் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் மற்றொரு வீடியோ தொகுப்பை நாளை மறுநாள் (14-ந்தேதி) வெளியிட உள்ளது.

    இதுபற்றி லண்டனில் இருந்து வெளிவரும் 'தி இன்டிபென்டென்ட்' பத்திரிகையில் ஆவணப்படத்தை தயாரிக்கும் கேல்லம் மெக்ரே என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் நீதிக்குப் புறம்பான வகையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 12 வயதே நிறைந்த அந்த சிறுவன் இடுப்பில் சுடப்பட்டுள்ளது. அவரது மார்பில் 5 துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்ட துவாரங்கள் காணப்படுகின்றன.

    பாலச்சந்திரனோடு மேலும் 5 ஆண்களின் சடலங்கள் கிடக்கின்றன. அவர்கள் அவரது மெய்க்காவலர்களாக இருக்கலாம். அவர்கள் அனைவரும் உடைகள் கழற்றப்பட்டு, பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

    அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் அருகிலேயே தரையில் கிடந்தன. சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட போராளிகளும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னணி தலைவர்களும், சிறுவர்களும் இலங்கை அரசுப் படைகளால் முறைப்படியான கொள்கையின் அடிப்படையின் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாகிறது.

    அந்த வீடியோவில் மே 18-ந்தேதி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 12 வயதான பாலச்சந்திரன் மரணம் தொடர்பான புதிய ஆதாரங்கள் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தங்களை அதிகரிக்க செய்யும். பாலச்சந்திரன் மற்றும் அவரது மெய்க்காவலர்களின் சடலங்கள் கிடக்கும் மிகத் தெளிவான உயர்துல்லியம் கொண்ட ஒளிப்படங்களை 'சேனல்-4' பெற்றுள்ளது.

    இவை பிரபல தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெர்ரிக் பவுண்டர் மூலம் ஆராயப்பட்டது. அவரது மெய்க்காப்பாளர்கள் பார்க்கும்படியாக பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. சிறுவனின் நெஞ்சில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி அல்லது அதற்கு குறைவான தூரத்திலேயே சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது.

    இறுதிக்கட்ட போரில் பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கானதற்கு அதிபர் ராஜபக்சே, பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சே, ராணுவ தளபதி சரத்பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம்.

    இந்த வீடியோ ஆதாரங்கள் வரும் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது. இலங்கையின் கொலைக் களங்கள்- தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற பெயரில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

    கடந்த ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட இலங்கையின போர்க் குற்றங்கள் ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

    அந்த வீடியோ காட்சி இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை மெய்ப்பிக்கும் மற்றொரு ஆதாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    இதுபற்றி உலக தமிழர் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறுகையில், 'சேனல்-4' வெளியிட உள்ள புதிய வீடியோ காட்சிகள், மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை நிரூபிக்கும் கூடுதல் ஆதாரமாக அமையும்.

    குறிப்பாக அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் பங்கு இதன்மூலம் தெளிவாகும். எனவே அமெரிக்கா கொண்டு வந்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா மற்றும் உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்றார்


    Posted by விழியே பேசு... at 6:25 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. AnonymousMarch 12, 2012 at 6:53 PM

      எத்தனை ஆதாரங்கள் வந்தும் சிங்களக் காடையர் அரசுக்கு துணை போன சோனியா காங்கிரஸ் அரசுக்கு, முண்டு பிடிப்பவர்களை இனம் காண தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.மூன்று ஆண்டுகளாக கண்களை மூடிக் கொண்டு பதவி பணத்திற்காக துணை போன கருணானிதி இன்று சினிமா வசனம் பேசுகிறார்.கலைஞர் தொலைக்காட்சி தற்போது கண்துடைப்பாக போர்க் குற்ற வீடியோவை ஒளிபரப்பு செய்கிறது. அமெரிக்காவின் தீர்மானத்தில் பெரிதாக ஒன்றும் இல்லாவிடினும் கூட அதை ஆதரிக்க பின் வாங்கும் சோனியா இந்தியா, சிங்களத்திடம் குட்டுப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நம் மீனவர் துயரம் தொடருகிறது. கேட்பார் யாருமிலர்.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ▼  March (333)
      • இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் ...
      • முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மி...
      • ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
      • ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தக...
      • கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வ...
      • உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'
      • போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்...
      • 'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
      • ''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6...
      • மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
      • யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
      • சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத...
      • தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : ...
      • ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?
      • கருணாநிதி மீது ராமதாஸ் பாய்ச்சல்: எதிர்க்கட்சியானா...
      • இணைய தளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட தடை: ஐகோ...
      • 3-டி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘டைட்டா...
      • தாம்பரத்தில் வீடு புகுந்து நந்தா பட பாணியில் கொள்ள...
      • திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெர...
      • நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயன்றேனா!: ந...
      • பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...
      • தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,0...
      • கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!
      • 'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான'...
      • கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில...
      • பட முன்னோட்டம் : 3
      • தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? ...
      • கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் த...
      • சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளி...
      • தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உய...
      • மீண்டும் இணையும் சகோதரிகள் :போயஸ் கார்டனில் சசிகலா!
      • ஜெயலலிதாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்ட...
      • ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையா...
      • இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக...
      • ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்...
      • டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொ...
      • கூடங்குளம்: உண்ணாவிரதம் வாபஸ்!
      • ராஜீவ் காந்தி கொலை: 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு ...
      • அரை குறை ஆடை அணிவதா?: நடிகை ஸ்ரீதேவிக்கு பெண்கள் ச...
      • படையினரை காட்டிக் கொடுத்து தப்பிக்க ராஜபக்சே 'ப்ளா...
      • சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்
      • ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வ...
      • லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா!
      • கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
      • அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இரு...
      • ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்...
      • கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.விடமிருந்து முதல்வருக்கு கடி...
      • சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்
      • ஆசியக் கோப்பை பைனலில் உண்மையில் வென்றது யார்? :புத...
      • கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: சீமான்
      • தமிழக பட்ஜெட்: நிலத்தின் விலை உயரும்...!
      • இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர்...
      • தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
      • மின்வெட்டு குறித்து கருணாநிதியை ஏற்கனவே எச்சரித்தே...
      • ஐ.பி.எல். பயத்தில் அஜித்..!
      • சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம்
      • இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
      • அஜீத்தின் பிறந்த நாளுக்கு பில்லா வராது...
      • மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
      • மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’
      • செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : ...
      • எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சி...
      • இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ...
      • அரசு விடுமுறை நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
      • ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ர...
      • கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன...
      • ஐ.நா. தீர்மானத்தால் பதட்டம்: இந்திய எம்.பி.க்களின்...
      • 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!
      • எல்லா வகையிலும் முயன்றோம்: ராஜபக்ஷேவுக்கு பிரதமர் ...
      • நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
      • கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாத...
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
      • யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே தி...
      • இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக ...
      • இனி கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!
      • இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்த...
      • ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
      • ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்...
      • சீனாவில் ராணுவ புரட்சியா?
      • இளமைக்காக த்ரிஷா ஊசி
      • வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
      • 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்: நீதி...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உய...
      • ஓய்வு பற்றி யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை: சச்சின்
      • இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபு...
      • இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. எதையும் செய்யக் கூடாது-...
      • 'ஐ லவ் யூ ஈரானியர்கள்'.. பேஸ்புக்கில் கலக்கும் இஸ்...
      • இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா...
      • இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியத...
      • ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்...
      • இந்தியாவின் இரட்டை வேடம் ஐ.நாவில் அம்பலம்
      • ரூட்டை மாத்து !: விஜய்
      • இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபர...
      • ‘பரதேசி’யான பாலாவின் படம்
      • கார்த்தி-யின் மூன்றாவது நாயகி
      • இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசி...
      • இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த ந...
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...
      • அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்...
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.