பஞ்சாபில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலிதளம் கூட்டணி வெற்றி பெற்று 5-வது முறையாக பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் எங்கு சென்றாலும் அவருக்கு தோல்விதான் என பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.
ராகுல் எந்த மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்றாலும் அவருக்கு தோல்விதான் ஏற்படும். எனவே அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை நாங்கள் வரவேற்கிறோம் என சுக்பீர் கேலி செய்தார்.
ஏற்கனவே பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் ராகுல் பிரச்சாரம் மேற்கொண்ட தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. அதன்பின் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ராகுல் வந்து பிரச்சாரம் மேற்கொண்டு காங்கிரசுக்கு தோல்வி தேடித்தர வேண்டுமென பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன் கேலி செய்தார்.
தற்போது உ.பி.யில் 3 மாதத்திற்கும் மேலாக தங்கியிருந்து, அவர் செய்த பிரச்சாரமும் படுதோல்வியில் முடிந்துள்ளது. இப்போதைய நிலைமையைப் பார்க்கையில் தமிழகத்தில் ராகுல் பிரச்சாரம் செய்திருந்தால், கிடைத்த 5 தொகுதிகளும் கூட கிடைக்காமல் போயிருக்குமோ எனத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment