ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் ஆடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்களைக் குவித்தது. அணியில் காம்பிர் 100, கோலி 108, தோனி 46, ரெய்னா 30 ரன்களை எடுத்தனர்.
305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்கார ஜெயவர்த்தன அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினார். இருப்பினும் தில்ஷன் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சங்ககார நிலைத்து நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்த நிலையில் பதானின் பந்தில் ஆட்டம் இழந்தார் ஜெயவர்த்தன. அடுத்து இக்கட்டான கட்டத்தில் 65 ரன் எடுத்திருந்த சங்ககராவை அஸ்வின் ஆட்டம் இழக்கச் செய்தார். தொடர்ந்து சண்டிமால், திரிமன்னே ஆகியோர் அஸ்வினின் சுழலில் ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியது.
அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இலங்கை அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 254 ரன்களே எடுத்தது. இதன்மூலம் 50- ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment