விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, March 16, 2012

    "அண்ணா நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்'' - கருணாநிதி ஆவேசம்


    "அண்ணா நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்" என்று ஆவேசமாக பேசினார் திமுக தலைவர் கருணாநிதி.

    சங்கரன்கோவில் தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து சங்கரன்கோவில் வடக்கு ரதவீதி, மேற்கு ரதவீதி சந்திக்கும் இடத்தில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது.

    கூட்டத்துக்கு மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேச்சு:

    சங்ரன்கோவில் இடைத் தேர்தல் பொதுக் கூட்டம் போல் அல்லாமல், ஒரு பிரசார மாநாடு நடைபெறுவது போன்று இந்த பொதுக்கூட்டம் அமைந்து இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு வந்து மேடையில் ஏறிய போது எனது எண்ணம் எல்லாம், ஏற்கனவே இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி மறைந்துவிட்ட தோழர் கருப்பசாமியை பற்றித்தான் நினைத்திருந்தது. அவருக்கு இந்த பொதுக்கூட்டத்திலே எனது இறுதி மரியாதையை, இறுதி அஞ்சலியை உங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    சட்டமன்றத்தில் அவர் வேடிக்கையாகவும், விளையாட்டகவும், சில நேரங்களில் வேதனையாகவும் நடந்து கொண்டதை நான் பொருட்படுத்தியது இல்லை.

    இந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்து இருக்கிறது. ஒருவர் மறைந்து அந்த இடத்தை நிரப்புவதற்காக வந்த தேர்தல் இது. இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள், யார் இருந்தார், யார் மறைந்துவிட்டார் என்பதையும், இப்போது யார் வரவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    அண்ணா... திராவிட...

    தி.மு.க. ஆட்சி திராவிட கொள்கைகளின் ஆட்சி. ஜெயலலிதா தலைமையில் இருக்கக் கூடியது அண்ணா தி.மு.க. ஆட்சி. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதில், 'அண்ணா' என்பது இயக்கத்தின் பெயர். 'திராவிட' என்பது வைத்துக் கொண்ட பெயர். அதை வைத்துக் கொண்டு தமிழகத்தில் என்னென்ன கூத்துகள் நடைபெறுகின்றன என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள், சாதாரண மக்கள், சாமானிய மக்கள், கல்வி வாசனையே அறியாத மக்கள் மற்றும் படிப்பது கூடாது என்று தடுக்கப்பட்ட மக்கள், அவர்களை எல்லாம் வாழ வைக்க திராவிடர் இயக்கம் உருவாகியது. அதை உருவாக்கி வளர்த்த பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் இப்போது இல்லை.

    ஆனால் நாம் இருக்கிறோம. எவ்வளவு நாட்கள் இருப்போம் என்பது தெரியாது. எவ்வளவு காலத்துக்கு இருப்போமோ அதுவரை திராவிடர் என்ற பெருமையை நிலைநாட்டும் கடைமையை நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்து இங்கே விளக்கிக் கொண்டிருக்கிறோம்.

    சுந்தரனாரும் விவேகானந்தரும்...

    திராவிட என்று சொல்ல உச்சரிக்கும் போது அதில் ஈர்க்கப்படுகிறவர்கள் உள்ளார்கள். அந்த சொல்லால் ஈர்க்கப்படுகிறவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.

    இந்த மாவட்டத்தை சேர்ந்த, இதே மாவட்டத்தில் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார், விவேகானந்தரை சந்தித்தார். விவேகானந்தரிடம் பேசிய போது அவர், "உங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன. உங்கள் கருத்துக்களை எல்லாம் சிந்திக்கிற வாய்ப்பை நான் பெறுகிறேன். அதே நேரத்தில் நான் திராவிடர் என்ற உரிமையை விட்டுத்தர எப்போதும் முடியாது," என்று சொன்னவர்தான் சுந்தரம்பிள்ளை. அப்படிப்பட்ட எடுத்துக்காட்டாக விளங்குகிற சொல் திராவிடம். அதை முதலாவதாகக் கொண்டு இயங்குகிற கழகம்தான் தி.மு.க.

    உண்மையான உணர்வோடு திராவிட என்ற சொல்லை பயன்படுத்தி, இன வரலாற்றை இளைய சமுதாயத்துக்கு உணர்த்தும் இயக்கம் தி.மு.க. அப்படிப்பட்ட தி.மு.க. நடத்தும் இந்த பிரசார பொதுக் கூட்டத்தில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்கிறோம்.

    'எடை' போடும் தேர்தல்

    இது இடைத்தேர்தல் என்று சொல்லப்படுகிறது. உண்மைதான். இந்த இடைத்தேர்தல். ஒருவர் மறைந்துவிட்டதால் நடத்தப்படுகிற தேர்தல் என்று சொல்லலாம். தற்போது நடைபெறுகிற ஆட்சியை, 9 மாத காலம் நடைபெற்ற ஆட்சியை எடை (இடை) போடுகிற தேர்தல் என்றும் சொல்லலாம்.

    1980-ம் ஆண்டு சங்கரன்கோவிலுக்கு வந்தேன். அப்போது விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 20 ஆயிரம் பேர் அந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். நாராயணசாமி நாயுடு, அவரது தளபதிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரை அ.தி.மு.க. ஆட்சியில் கைது செய்து சிறையில் போட்டார்கள். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் இறந்தார்கள். அதை கண்டித்து போராட்டம் நடத்தியதுதான் தி.மு.க.தான். அதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    7 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து செய்தோம். விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம். பயிர் கடனை தள்ளுபடி செய்தோம். தாட்கோ கடனை தள்ளுபடி செய்தோம். உழவர் சந்தைகள் அமைத்தோம்.

    ரூ.319 கோடி செலவில் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினோம். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் அந்த திட்டத்துக்காக எத்தனை முறை இங்கே வந்தார் என்பது உங்களுக்கே தெரியும்.

    சமச்சீர் கல்வி பட்டபாடு

    இன்றைய ஜெயலலிதா ஆட்சியில் என்னென்ன செய்தார் என்பதும் உங்களுக்கு தெரியும். ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக சமச்சீர் கல்வி திட்டத்தை சமாதிக்கு அனுப்ப முயற்சி செய்தார். உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பெற்ற தீர்ப்புதான், தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது. நாம் உச்சநீதி மன்றத்துக்கு செல்லாமல் இருந்து இருந்தால் இன்று சமச்சீர் கல்வி என்பதே இல்லாமல் போயிருக்கும். உயிர் சாதிக்கு கல்வியும், அடிமட்ட சாதிக்க படிப்பறிவே கிடையாது, வாய்ப்பு குறைவு என்ற சூழ்நிலைதான் வாய்த்திருக்கும்.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை இடித்து, துவைத்து, தரைமட்டமாக்கி, அதில் இருந்த ஆயிரக்கணக்கான புத்தகத்தை எல்லாம் குப்பைக் கிடங்குக்கு அனுப்பி பாரதிதாசன் புகழுக்கே களங்கத்தை ஏற்படுத்திய அரசுதான், ஜெயலலிதா அரசு. தமிழை உயிராக மதித்த பாரதிதாசன், தேவநேயபாவாணர், பாரதியார் படங்களை அகற்றினார்கள்.

    ஒரு ஆட்சி மாறி, அல்லது மக்களால் மாற்றப்பட்டு இன்னொரு ஆட்சி வருவது இயற்கை. அப்படி வருகிற போது ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்கள், முதலில் இருந்த ஆட்சியில் இருந்தவர்களை மதிக்க வேண்டும்.

    வெள்ளையர் படங்களை ஏன் அகற்றினோம் என்றால் அவர்களால் நாம் அடிமைப்பட்டோம் என்பதால் அகற்றினோம். புரட்சிக் கவிஞர் என்ன செய்தார்? புரட்சிக் கவிஞர் புத்தகங்களை எல்லாம் குப்பைக்கிடக்குக்கு ஏன் அனுப்ப வேண்டும்? இது நியாயம்தானா?

    தீக்குளிப்பேன்...

    சென்னையில் அண்ணாவின் பெயரால் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நூலகத்தை, ஆசியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் கட்டப்பட்ட நூலகத்தை, வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் பாராட்டி புகழ்ந்த நூலகம் அது.

    அண்ணாவின் புகழை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டினோம். ஆனால் அதை இடித்துவிட்டு மருத்துவமனையாக்க போகிறேன் என்று ஜெயலலிதா கூறுகிறார். அண்ணா பெயரால் கட்சி வைத்துக் கொள்ள உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

    மருத்துவமனை கூடாது என்று சொல்பவன் நான் அல்ல. வேண்டும் என்றே அண்ணா பெயரால் நாங்கள் அமைத்த நூலகத்தை அகற்றிவிட்டு அங்கே ஆஸ்பத்திரி கட்டுவோம் என்றால், அது யாருக்கு ஆஸ்பத்திரி? மனநோயாளிகளுக்கா?

    இன்றைக்கு சொல்லி வைக்கிறேன். தியாகிகளுக்கு, போராட்டக்காரர்களுக்கு, புகழ் சேர்த்துக் கொடுத்த நெல்லைச் சீமையில் இருந்து சொல்லிக் கொள்கிறேன், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அதை அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா அடம்பிடிப்பாரேயானால், அந்த நாள் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.

    தம்பி, தம்பி என்று பாராட்டி எங்களை எல்லாம் ஆளாக்க அண்ணா அரும்பாடுபட்டார். அவர் பெயரால் உருவான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நாங்கள் அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா ஆணையிடுகிறார் என்றால் நாங்கள் மேற்சொன்னதைவிட என்ன சொல்லிவிட முடியும்?

    அண்ணா தான் எங்களுக்கு ஆசிரியர். அவரை உருவாக்கியவர் தந்தை பெரியார். எக்காரணம் கொண்டும் திராவிட குறிக்கோளில் இருந்த இடம் மாறிவிட மாட்டோம்.

    இந்த தொகுதியில் இருக்கும் ஆடவர்களே, பெண்டீர்களே, ஆசிரிய பெருமக்களே, மாணவச் செல்வங்களே, விவசாய பெருங்குடி மக்களே, நெசவாள தோழர்களே, நீங்கள் எல்லாம் தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமாருக்கு, உங்கள் மேலான வாக்குகளை உதய சூரியன் சின்னத்திலே அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்," என்றார் கருணாநிதி.

    பங்கேற்றவர்கள்

    முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்மைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்திருமாவளவன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், வல்லரசு பார்வர்டு பிளாக் நிர்வாகி அமாவாசை, இந்திய தேசிய லீக் பஷீர் அகமது, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கவேலு, ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், சற்குணபாண்டியன், பொன்முத்துராமலிங்கம், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    Posted by விழியே பேசு... at 2:07 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. AnonymousMarch 16, 2012 at 5:46 PM

      விழியே பேசு நேற்றைய தினம் சங்கரன் கோயில் தேர்தல் பிரசாரம்.(?)
      வந்திட்டான்யா வந்திட்டான்.பதவி விலகியாச்சு,உண்ணாவிரதம் இருந்தாச்சு,தீக்குளிப்பது தான் பாக்கி.நல்லா தீக்குளியுங்க.இன்னமும் எத்தனை நாள்.இன்று போனால் என்ன நாளை போனால் என்ன.இன உணர்வுள்ள தமிழன் எவனும் கவலைப் பட மாட்டான்.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ▼  March (333)
      • இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் ...
      • முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மி...
      • ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
      • ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தக...
      • கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வ...
      • உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'
      • போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்...
      • 'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
      • ''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6...
      • மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
      • யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
      • சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத...
      • தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : ...
      • ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?
      • கருணாநிதி மீது ராமதாஸ் பாய்ச்சல்: எதிர்க்கட்சியானா...
      • இணைய தளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட தடை: ஐகோ...
      • 3-டி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘டைட்டா...
      • தாம்பரத்தில் வீடு புகுந்து நந்தா பட பாணியில் கொள்ள...
      • திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெர...
      • நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயன்றேனா!: ந...
      • பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...
      • தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,0...
      • கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!
      • 'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான'...
      • கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில...
      • பட முன்னோட்டம் : 3
      • தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? ...
      • கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் த...
      • சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளி...
      • தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உய...
      • மீண்டும் இணையும் சகோதரிகள் :போயஸ் கார்டனில் சசிகலா!
      • ஜெயலலிதாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்ட...
      • ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையா...
      • இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக...
      • ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்...
      • டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொ...
      • கூடங்குளம்: உண்ணாவிரதம் வாபஸ்!
      • ராஜீவ் காந்தி கொலை: 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு ...
      • அரை குறை ஆடை அணிவதா?: நடிகை ஸ்ரீதேவிக்கு பெண்கள் ச...
      • படையினரை காட்டிக் கொடுத்து தப்பிக்க ராஜபக்சே 'ப்ளா...
      • சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்
      • ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வ...
      • லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா!
      • கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
      • அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இரு...
      • ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்...
      • கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.விடமிருந்து முதல்வருக்கு கடி...
      • சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்
      • ஆசியக் கோப்பை பைனலில் உண்மையில் வென்றது யார்? :புத...
      • கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: சீமான்
      • தமிழக பட்ஜெட்: நிலத்தின் விலை உயரும்...!
      • இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர்...
      • தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
      • மின்வெட்டு குறித்து கருணாநிதியை ஏற்கனவே எச்சரித்தே...
      • ஐ.பி.எல். பயத்தில் அஜித்..!
      • சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம்
      • இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
      • அஜீத்தின் பிறந்த நாளுக்கு பில்லா வராது...
      • மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
      • மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’
      • செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : ...
      • எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சி...
      • இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ...
      • அரசு விடுமுறை நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
      • ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ர...
      • கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன...
      • ஐ.நா. தீர்மானத்தால் பதட்டம்: இந்திய எம்.பி.க்களின்...
      • 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!
      • எல்லா வகையிலும் முயன்றோம்: ராஜபக்ஷேவுக்கு பிரதமர் ...
      • நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
      • கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாத...
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
      • யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே தி...
      • இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக ...
      • இனி கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!
      • இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்த...
      • ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
      • ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்...
      • சீனாவில் ராணுவ புரட்சியா?
      • இளமைக்காக த்ரிஷா ஊசி
      • வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
      • 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்: நீதி...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உய...
      • ஓய்வு பற்றி யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை: சச்சின்
      • இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபு...
      • இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. எதையும் செய்யக் கூடாது-...
      • 'ஐ லவ் யூ ஈரானியர்கள்'.. பேஸ்புக்கில் கலக்கும் இஸ்...
      • இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா...
      • இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியத...
      • ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்...
      • இந்தியாவின் இரட்டை வேடம் ஐ.நாவில் அம்பலம்
      • ரூட்டை மாத்து !: விஜய்
      • இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபர...
      • ‘பரதேசி’யான பாலாவின் படம்
      • கார்த்தி-யின் மூன்றாவது நாயகி
      • இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசி...
      • இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த ந...
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...
      • அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்...
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.