அ.தி.மு.க. பிரமுகரும், அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினருமான முருகானந்தம் 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பெயர்கள் அவ்வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர்.
அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரி சி.வி. சண்முகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து அவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் அவரிடம் சி.பி.ஐ நேற்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ராமதாசிடம் விசாரணை நடத்தியதாக சி.பி.ஐ, தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் இன்றும் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment