இலங்கைக்கு
எதிரான 4வது ஒருநாள் போட்டியில்
173 பந்துகளில் 264 ரன்களைக் குவித்து இந்திய வீரர் ரோஹித்
சர்மா உலக சாதனை படைத்தை
நாடே கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் 39 ஆண்டுகளுக்கு
முன்னர் 174 பந்துகளில் வெறும் 36 ரன்களைக் குவித்த 'ஜாம்பவானை'யும் கிரிக்கெட் ரசிகர்கள்
நினைவு கொள்ள தவறவில்லை.
கொல்கத்தாவின்
ஈடன் மைதானம் அதிர அதிர
174 பந்துகளில் இரட்டை சதமடித்து, அதிக
ரன்களைக் குவித்து 5 உலக சாதனைகளைப் படைத்தார்
ரோஹித் சர்மா. இதில் 33 பவுண்டரிகள்,
9 சிக்சர்களும் அடங்கும்.
60 ஓவர்கள்
போட்டி
கடந்த
39 ஆண்டுகளுக்கும் முன்னர் முதலாவது உலகக்
கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
அப்போது ஒருநாள் போட்டிக்கு 60 ஓவர்கள்
நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
1975ஆம் ஆண்டு ஜூன் 7-ந்
தேதி இங்கிலாந்துடன் இந்திய அணி மோதியது.
334 குவித்த
இங்கிலாந்து-
முதலில்
விளையாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர் முடிவில்
4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களைக் குவித்தது.
132-ல்
சுருண்ட இந்தியா
பின்னர்
ஆடிய இந்திய அணியோ 3 விக்கெட்
இழப்புக்கு வெறும் 132 ரன்களைத்தான் எடுத்தது.
174 பந்தில்
36 ரன் தொட்ட கவாஸ்கர்
இதில் தொடக்க வீரராக களம்
இறங்கிய கவாஸ்கர் 60 ஓவரையும் தாக்குப் பிடித்து நின்று அவுட் ஆகாமல்
இருந்தார். அவர் எதிர்கொண்ட பந்துகள்
எண்ணிக்கை 174. அடித்த ரன்களின் எண்ணிக்கையோ
வெறும் 36. இதில் ஒரே ஒரு
பவுண்டரியும் கூட. அப்போது இந்திய
அணியில் ஜி.ஆர். விஸ்வநாத்
அதிகபட்சமாக 37 ரன்களை எடுத்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
செம்ம்ம்ம
"கட்ட" ஆட்டம்பா!
No comments:
Post a Comment