இதனிடையே,
அங்கு ஏற்பட்ட சூழ்நிலையை சுமூகமாகவும்,
அமைதியாகவும் கையாண்டதாகவும், பலரின் உயிரை காப்பாற்றியுள்ளதாகவும்
அரியானா மாநில அரசு கூறியுள்ளது.
முன்னதாக
கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அரியானா
முதல்வர் கட்டார், ராம்பாலை கைது செய்யும் வரை
போலீசாரின் நடவடிக்கை தொடரும் எனவும், அவர்
மீது அவதூறு வழக்கு உள்ளதாகவும்
கூறியிருந்தார். ஆசிரமத்தில் நிலவும் பிரச்னையை சுமூகமாக
தீர்க்க வேண்டும் என அரியானா அரசுக்கு
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்
சிங் அறிவுரை கூறியிருந்தார்.
கொலை வழக்கில் சிக்கிய சாமியார் ராம்பால்
நேரில் ஆஜராக அரியானா மற்றும்
பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தன. ஆனால்,
உடல்நலக்குறைவு காரணமாக தன்னால் ஆஜராக
முடியாது என மறுத்த சாமியார்
ராம்பால் தலைமறைவானார். அவர் உடனடியாக சரணடைய
வேண்டும் என போலீசார் தெரிவித்திருத்தனர்.
அதற்கும் ராம்பால் மறுத்து வந்தார். இந்நிலையில்,
ஹிசாரில் உள்ள ஆஸ்ரமத்தில் அவர்
பதுங்கி உள்ளதாக தகவல்கள் வௌியாகின.
No comments:
Post a Comment