அரியானாவின்
ஹிசாரில் சாமியார் ராம்பால் ஆசிரமத்துக்குள் போலீஸ் நுழைந்துள்ளது. ஆசிரமத்தில்
உள்ள ராம்பால் ஆதரவாளர்கள் 30 நிமிடத்திற்குள் ஆசிரமத்தை காலி செய்ய வேண்டும்
என போலீஸ் உத்தரவிட்டுள்ளது. காலையில்
இருந்து இதுவரை ராம்பால் ஆதரவாளர்கள்
2,000 பேர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சாமியார்
ராம்பால் எங்கே?
சாமியார்
ராம்பாலை பிடிக்க ஹிசாரில் உள்ள
ஆசிரமத்தில் போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹிசார் ஆசிரமத்தில் சாமியார் ராம்பால் இல்லாததால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மறைவிடம் எதிலும் சாமியார் பதுங்கி
உள்ளாரா என போலீஸ் தீவிர
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டத்தோடு கூட்டமாக பெண் வேடமிட்டு தப்பியிருக்கலாம்
என ஐயத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment