ஜெயலலிதாவின்
பதவி பறிப்பு அறிவிப்பை முறைப்படி
வெளியிட்ட தமிழக சட்டப்பேரவை செயலாளர்
ஜமாலுதீன், அந்த பொறுப்பில் இருந்து
நேற்று விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியானதால் கோட்டையில்
திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காரணம், மிகவும் கடுமையான
வாசகங்கள் அந்த அறிவிக்கையில் இருந்ததாக
கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்
கில் பெங்களூர் தனி நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு
4 ஆண்டு சிறை தண்டனை விதித்து
கடந்த செப்டம்பர் 27ம் தேதி அறிவித்தது.
தண்டனை அறிவிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல்
ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ
பதவி தானாகவே பறிபோனது. இதையடுத்து,
தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் செப்டம்பர் 29ல் பதவியேற்றார். வழக்கமாக,
முதல்வர் அல்லது அமைச்சர், எம்எல்ஏ
ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில்
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால், அந்த
மாநில சட்டப்பேரவை செயலாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட தொகுதி காலியாக உள்ளது
என்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க
வேண்டும்.
அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆணையம்
ஆய்வு செய்யும். ஆனால், ஜெயலலிதா வெற்றிபெற்ற
ஸ்ரீரங்கம் தொகுதி காலியாகிஉள்ளது என்று,
தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் தகவல் அனுப்பாமல் காலம்
தாழ்த்தினார். ஸ்ரீரங்கம் தொகுதியை காலியிடமாக உடனே அறிவிக்க வேண்டும்
என்று எதிர்க்கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, ஸ்ரீரங்கம்
தொகுதி காலியாக உள்ளது என்று
கடந்த 8ம் தேதி தேர்தல்
ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக ஜமாலுதீன் கடிதம் அனுப்பினார்.
இந்த
அறிவிப்பு வெளியாகிய சில நாட்களில் தமிழ்நாடு
அரசிதழிலும், ஜெயலலிதா எம்எல்ஏ பதவி பறிப்பு
மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி காலியானது என்று
அதிகாரப்பூர்வமாக ஜமாலுதீன் அறிவித்தார். அரசிதழில், ஜெயலலிதாவுக்கு எந்தெந்த பிரிவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, னீ100
கோடி அபராதம், அபராத தொகையை கட்டத்தவறினால்
மேலும் 1 ஆண்டு சிறை அளிக்கப்படும்.
தண்டனை காலம் முடிந்த பிறகும்
ஜெயலலிதா 6 ஆண்டு என 10 ஆண்டுகள்
தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உள்பட முழு
தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.
அரசிதழில்
ஜமாலுதீன் பெயரில் வந்த இந்த
அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அந்த பதவியில் இருந்து
டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக நேற்று மாலை தகவல்
வெளியானது. ஆனால், தலைமை செயலக
அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தகவல் தெரிவிக்க மறுத்து
விட்டனர். ஜமாலுதீனையும் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஆனால், அவரது அலுவலக ஊழியர்கள்
அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு வழியனுப்பினர். 2011 மே மாதம் அதிமுக
ஆட்சிக்கு வந்த பிறகுதான் சட்டப்பேரவை
செயலாளராக ஜமாலுதீன் நியமிக்கப்பட்டார். 2012ல் ஜமாலுதீன் ஓய்வு
பெற்றார். ஆனாலும், அதிமுக ஆட்சியில் அவருக்கு
ஓய்வு அளிக்காமல் தொடர்ந்து 5 ஆண்டு பணி நீட்டிப்பு
வழங்கப்பட்டது. இப்போது, பதவி நீட்டிப்பு பெற்று
2 ஆண்டு ஆன நிலையில் அவர்
டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனிச்சாமி
நியமனம்?
சட்டப்பேரவை
செயலா ளர் பொறுப்பில் இருந்து
ஜமாலுதீன் நீக்கப்பட்டதால், இணை செயலாளராக இருந்த
பழனிச்சாமி, பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment