சீன ஓபன் சூப்பர் சீரீஸ்
பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர்
பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின்
நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால், ஆண்கள்
ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி
ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அகானே
யாமகுச்சியுடன் (ஜப்பான்) நேற்று மோதிய சாய்னா
21,12, 22,20 என்ற நேர் செட்களில் வென்று
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 42 நிமிடம் நீடித்தது. நடப்பு
சீசனில் சாய்னா பெறும் 3வது
சாம்பியன் பட்டம் இது. முன்னதாக,
ஆஸ்திரேலியன் சூப்பர் சீரீஸ் மற்றும்
சையது மோடி சர்வதேச கிராண்ட்
பிரீ கோல்டு தொடரில் அவர்
கோப்பையை கைப்பற்றி இருந்தார்.
ஆண்கள்
ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்
இந்திய வீரர் கே.ஸ்ரீகாந்த்
2 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டமும் 5 முறை உலக சாம்பியன்
பட்டமும் வென்றவரான லின் டானுடன் (சீனா)
மோதினார். மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட
இந்த போட்டியில், அபாரமாக விளையாடிய ஸ்ரீகாந்த்
21,19, 21,17 என்ற நேர் செட்களில் உள்ளூர்
வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
சூப்பர்
சீரீஸ் பேட்மின்டன் தொடரில் ஸ்ரீகாந்த் பட்டம்
வெல்வது இதுவே முதல் முறை
என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தொடரின் ஆண்கள்
மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில்
இந்திய வீரர், வீராங்கனை சாம்பியன்
பட்டம் வெல்வதும் இதுவே முதல் முறையாகும்.
No comments:
Post a Comment