இதைத் தொடர்ந்து ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘திருடன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, இயக்குனர் சசி இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார்.
‘555’ படத்திற்கு பிறகு சசி இயக்கும் இப்படத்திற்கு ‘பிச்சைக்காரன்’ என்றும் தலைப்பு வைத்திருந்தனர். இதன் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதமே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘இந்தியா பாகிஸ்தான்’ படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி பிசியாக இருந்ததால் ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன்’ படத்தில் தயாராகிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். விரைவில் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment