விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, March 22, 2012

    இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 3 மடங்கு அதிக ஓட்டுக்களை பெற்றது எப்படி?


    சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சங்கரன் கோவில் தொகுதி அ.தி.மு.க. கோட்டை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில் தொகுதியில் 1957-ம் ஆண்டு நடந்த முதல் பொது தேர்தல் தொடங்கி தற்போது நடந்த தேர்தல் வரை 14 தேர்தல்களில் ஆரம்ப காலத்தில் மட்டும் காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்து அ.தி.மு.க. உருவாகாத கழகம் ஒன்றுபட்டு இருந்த போது தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க. தோன்றிய பிறகு தி.மு.க. 2 முறையும் ஆக மொத்தம் 4 முறை வெற்றி பெற்றுள்ளது.

    எம்.ஜி.ஆர். இருந்த போது 2 முறையும், ஜெயலலிதா தலைமை ஏற்ற பிறகு 6 முறையுமாக மொத்தம் 8 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதிலும் ஜெயலலிதா தலைமை பொறுப்பு ஏற்ற பிறகு நடந்த அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.

    இதில் அ.தி.மு.க.வின் மறைந்த அமைச்சர் கருப்பசாமி மட்டும் தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.இந்த தொகுதியில் இதற்கு முன்பு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதிகபட்சமாக பெற்ற ஓட்டுகள் 70 ஆயிரத்து 297 தான். ஆனால் இப்போது போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 94 ஆயிரத்து 977 ஓட்டுக்கள் வாங்கி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

    தி.மு.க.வுக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 61 ஆயிரத்து 902 ஓட்டுகள் கிடைத்தது. ஆனால் இப்போது 26 ஆயிரத்து 220 ஓட்டுக்களாக குறைந்து இருக்கிறது. இது கடந்த தேர்தலைவிட 35 ஆயிரம் ஓட்டுகள் குறைவு.

    கடந்த தேர்தலில் கருப்பசாமி 11 ஆயிரத்து 395 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது முத்துச் செல்வி 68 ஆயிரத்து 757 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட 5 மடங்கு அதிகம்.

    1996-ல் ம.தி.மு.க. இந்த தொகுதியில் ஜனதா தளம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டபோது 30 ஆயிரத்து 893 ஓட்டுகள் பெற்றது. 2001-ல் 20 ஆயிரத்து 610 ஓட்டுகள் கிடைத்தது. இப்போது ம.தி.மு.க.வுக்கு 20 ஆயிரத்து 678 ஓட்டுகள் பெற்றுள்ளது.

    தே.மு.தி.க.வுக்கு 12 ஆயிரத்து 144 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் தே.மு.தி.க. போட்டியிட வில்லை. அதற்கு முன்பு நடந்த தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் 5 ஆயிரத்து 531 ஓட்டுக்கள் பெற்றார். பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் 1,633 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளது.தே.மு.தி.க. இதற்கு முன்பு பெற்றதை விட 6,613 ஓட்டுக்கள் அதிகம் பெற்றுள்ளது. என்றாலும் தனித்து போட்டியிட்டு அ.தி.மு.க.வுக்கு சவாலாக இருப்போம் என்று விஜயகாந்த் கூறி இருந்தார்.

    ஆனால், தே.மு.தி.க. 4-வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. இதற்கு முன்பு பெற்ற ஓட்டுக்களை விட அதிக ஓட்டுக்களை பெற்று இருக்கிறோம் என்று அவர்கள் சொன்னாலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி பெற முடிந்தது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியது உண்மையாகி இருக்கிறது.

    முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த கிராமமான புளியம் பட்டியில் 3 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் அ.தி.மு.க.வுக்கே அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இங்கு அ.தி.மு.க. 10,984 ஓட்டுக்களும், தி.மு.க.வுக்கு 450 ஓட்டுக்களும் கிடைத்தன. தே.மு.தி.க.வுக்கு 218 ஓட்டுக்களையும், ம.தி.மு.க. 83 ஓட்டுக்களையும் பெற்றுள்ளன.

    வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க.வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன. இங்கு அமைக்கப்பட்டிருந்த 3 ஓட்டுச்சாவடிகளில் ம.தி.மு.க. 1,158 வாக்குகளைப் பெற்றது. அ.தி.மு.க.வுக்கு 761 ஓட்டுக்களும், தி.மு.க.வுக்கு 110 ஓட்டுக்களும், தே.மு. தி.க.வுக்கு 42 ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.

    பஸ் கட்டணம், பால் விலை உயர்வு, மின்வெட்டு என்று பல்வேறு பிரச்சினைகளைச் சொல்லி எதிர்க் கட்சிகள் ஓட்டு கேட்டன. ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மின்வெட்டுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரசாரம் செய்தார்.

    அ.தி.மு.க. வெற்றி பெற்றால் சங்கரன்கோவில் மக்கள் சங்கடம் இல்லாமல் வாழ அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று கூறினார். அ.தி.மு.க.வுக்கு சோதனையான காலத்திலும் சங்கரன்கோவில் மக்கள் வாக்களித்தனர். எப்போதும் அ.தி.மு.க.வின் பக்கம் இருந்து சங்கரன்கோவில் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    மற்ற கட்சிகளை 'டெபாசிட்' இழக்கச் செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தின் போது கேட்டுக் கொண்டார். அது அப்படியே நிறைவேறி இருக்கிறது.

    இதற்கு முதல்-அமைச்சரின் வாக்குறுதியை இந்த தொகுதி மக்கள் நம்புவதே காரணம் என்று சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இடைத்தேர்தலில் எதிர்க் கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டால் பெரிய அளவில் பயன் இருக்காது. ஆனால் ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் தேவையான திட்டங்கள் நிறைவேறும், அ.தி.மு.க. வேட்பாளரிடம் சொல்லி தொகுதிக்கு வேண்டியதை பெறலாம் என்று வாக்காளர்கள் கருதியதால்தான் அ.தி.மு.க.வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்க காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால், அ.தி.மு.க. வேட்பாளர் மட்டுமே ஒரு பெண் வேட்பாளர். மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஆண் வேட்பாளர்கள். இதனால் பெண்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு ஏற்பட்டுவிட்டது.

    அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி ஏற்கனவே நகர்மன்ற தலைவியாக இருந்து அறிமுகமானவர். அவரது தந்தையும் அ.தி. மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. இதனால் அவரது குடும்ப ஓட்டுக்களும் அவரது குடும்பத்தினருக்குள்ள செல்வாக்கும் கூடுதல் பலத்தை கொடுத்தன. 

    சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தி.மு.க.வை விட 3 மடங்கு அதிகமாக ஓட்டுக்களை பெற்று இருக்கிறார். தாழ்த்தப்பட்ட மற்றும் பெரும்பாலான பிரிவினர் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து உள்ளனர். கலிங்கப்பட்டி தவிர மற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அ.தி.மு.க.வுக்கே அதிகமாக ஓட்டுக்கள் கிடைத்து இருக்கின்றன.

    அரசு திட்டங்கள் தொகுதி மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வினர் ஒரு மாதத்துக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைத்த வியூகத்தின்படி 32 அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் தொகுதியில் முகாமிட்டு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார்கள்.

    மற்ற கட்சிகள் தேர்தல் பணியை தொடங்குவதற்குள் அ.தி.மு.க.வினர் பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பணியை நிறைவு செய்து விட்டனர்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணமும், வாக்குறுதிகளும் சங்கரன்கோவில் மக்களுக்கு முழு நம்பிக்கையை கொடுத்ததால் அது அ.தி.மு.க. அமோக வெற்றியை அள்ள வழி வகுத்தது என்றே அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.


    Posted by விழியே பேசு... at 1:02 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ▼  March (333)
      • இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் ...
      • முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மி...
      • ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
      • ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தக...
      • கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வ...
      • உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'
      • போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்...
      • 'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
      • ''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6...
      • மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
      • யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
      • சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத...
      • தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : ...
      • ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?
      • கருணாநிதி மீது ராமதாஸ் பாய்ச்சல்: எதிர்க்கட்சியானா...
      • இணைய தளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட தடை: ஐகோ...
      • 3-டி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘டைட்டா...
      • தாம்பரத்தில் வீடு புகுந்து நந்தா பட பாணியில் கொள்ள...
      • திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெர...
      • நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயன்றேனா!: ந...
      • பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...
      • தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,0...
      • கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!
      • 'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான'...
      • கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில...
      • பட முன்னோட்டம் : 3
      • தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? ...
      • கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் த...
      • சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளி...
      • தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உய...
      • மீண்டும் இணையும் சகோதரிகள் :போயஸ் கார்டனில் சசிகலா!
      • ஜெயலலிதாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்ட...
      • ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையா...
      • இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக...
      • ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்...
      • டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொ...
      • கூடங்குளம்: உண்ணாவிரதம் வாபஸ்!
      • ராஜீவ் காந்தி கொலை: 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு ...
      • அரை குறை ஆடை அணிவதா?: நடிகை ஸ்ரீதேவிக்கு பெண்கள் ச...
      • படையினரை காட்டிக் கொடுத்து தப்பிக்க ராஜபக்சே 'ப்ளா...
      • சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்
      • ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வ...
      • லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா!
      • கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
      • அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இரு...
      • ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்...
      • கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.விடமிருந்து முதல்வருக்கு கடி...
      • சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்
      • ஆசியக் கோப்பை பைனலில் உண்மையில் வென்றது யார்? :புத...
      • கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: சீமான்
      • தமிழக பட்ஜெட்: நிலத்தின் விலை உயரும்...!
      • இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர்...
      • தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
      • மின்வெட்டு குறித்து கருணாநிதியை ஏற்கனவே எச்சரித்தே...
      • ஐ.பி.எல். பயத்தில் அஜித்..!
      • சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம்
      • இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
      • அஜீத்தின் பிறந்த நாளுக்கு பில்லா வராது...
      • மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
      • மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’
      • செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : ...
      • எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சி...
      • இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ...
      • அரசு விடுமுறை நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
      • ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ர...
      • கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன...
      • ஐ.நா. தீர்மானத்தால் பதட்டம்: இந்திய எம்.பி.க்களின்...
      • 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!
      • எல்லா வகையிலும் முயன்றோம்: ராஜபக்ஷேவுக்கு பிரதமர் ...
      • நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
      • கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாத...
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
      • யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே தி...
      • இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக ...
      • இனி கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!
      • இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்த...
      • ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
      • ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்...
      • சீனாவில் ராணுவ புரட்சியா?
      • இளமைக்காக த்ரிஷா ஊசி
      • வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
      • 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்: நீதி...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உய...
      • ஓய்வு பற்றி யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை: சச்சின்
      • இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபு...
      • இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. எதையும் செய்யக் கூடாது-...
      • 'ஐ லவ் யூ ஈரானியர்கள்'.. பேஸ்புக்கில் கலக்கும் இஸ்...
      • இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா...
      • இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியத...
      • ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்...
      • இந்தியாவின் இரட்டை வேடம் ஐ.நாவில் அம்பலம்
      • ரூட்டை மாத்து !: விஜய்
      • இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபர...
      • ‘பரதேசி’யான பாலாவின் படம்
      • கார்த்தி-யின் மூன்றாவது நாயகி
      • இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசி...
      • இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த ந...
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...
      • அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்...
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.