விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, March 13, 2012

    பிரபாகரன் கொல்லப்பட்ட? காட்சிகளும் நாளை ஒளிபரப்பு


    தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க போராடிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நந்திக் கடல் பகுதியில் 4-வது இறுதி கட்ட போர் நடந்தது. அதில் விடுதலைப் புலிகளுடன், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் கொல்லப்பட்டனர்.

    ஈழத் தமிழர்களை சிங்கள படைகள் திட்டமிட்டு அழித்து மாபெரும் இனப்படு கொலையை நடத்தின. 26 ஆண்டுகளாக நடந்து வந்த ஈழப்போரை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக கருதிய சிங்கள அரசு, இந்தியா, சீனா உள்பட சில நாடுகளின் துணையுடன் இறுதி கட்ட படுகொலைகளை மறைக்க முயன்றது. ஆனால் இங்கிலாந்தில் செயல்படும் 'சேனல்-4' என்ற தொலைக் காட்சி 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி ஒளிபரப்பியது.

    இதன் மூலம் இலங்கையில் நடந்த இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் வெட்ட வெளிச்சமானது. அதன் பிறகே இலங்கை மீதான பிடி இறுகியது. குறிப்பாக மகிந்த ராஜபக்சே போர் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பை உருவாக்கி இருக்கும் இந்த தீர்மானத்தை தோற்கடிக்க சிங்களர்கள் குள்ளநரி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் அந்த முயற்சிகளை தவிடு பொடியாக்கும் வகையில் 'சேனல்-4' தொலைக்காட்சி புதிய ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்பபோவதாக அறிவித்துள்ளது. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பிடித்து வைத்து சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இந்திய நேரப்படி நாளை மறு நாள் (வியாழக்கிழமை) அதிகாலை 4.25 மணிக்கு அந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது. லண்டன் நேரப்படி அங்கு நாளை (புதன்கிழமை) இரவு 10.55 மணிக்கு காணலாம்.சேனல்-4 தொலைக்காட்சியில் இந்த புதிய ஆவணப் படம் சுமார் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்.

    பாலச்சந்திரன் கொலை செய்யப்படும் காட்சிகளைத் தொடர்ந்து பிரபாகரன் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையானது தானா என்று ஆய்வு செய்யப்பட்டன. அவை உண்மை தான் என்று தடயவியல் நிபுணர் டெரிக் பவுண்டர் கூறினார்.

    அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    பிரபாகரன் கொல்லப்பட்டதாக எங்களுக்கு வந்த படத்தை ஆய்வு செய்தோம். அதில் பிரபாகரன் தலையில் மிக பலத்த காயம் உள்ளது. அவரது தலையில் பாய்ந்துள்ள குண்டு காயத்தை பார்க்கும் போது, மிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்க வேண்டும்.

    போரின் போது ஒரு நபரை ஒரே குண்டில் கொல்வது என்பது இயலாத காரியம். அது சாத்தியமும் அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது, அவரை உயிருடன் பிடித்து பின்னர் கொலை செய்திருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

    மேலும் அசையாத நிலையில் ஒருவரை சுடும் போது, எத்தகைய குண்டு காயம் ஏற்படுமோ அத்தகைய காயம் ஏற்பட்டுள்ளது. அரசின் உயர்மட்ட அனுமதி இல்லாமல் இதை செய்து இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட காட்சிகள் உண்மையானது தான் என்று கூறிய தடயவியல் நிபுணர்கள், பிரபாகரனின் வீடியோ காட்சிகளை உறுதிபடுத்த தயங்குகிறார்கள். இந்த வீடியோ காட்சி அதிகாரப்பூர்வமானது அல்ல என்று நாங்கள் உணர்கிறோம் என பிரபல தடயவியல் நிபுணர் டெரிக் பவுண்டர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே சென்னையில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் பிரபாகரனின் கடைசி நாட்கள் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சிங்கள ராணுவத்தால் நாலாபுறமும் சுற்றி வளைக்கப்பட்டபிரபாகரன் வேறுவழியின்றி சிங்கள படைகளிடம் சரண் அடைந்தார் என்றும், அவரை 2 நாட்கள் சிங்கள படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து சித்ரவதை செய்ததாகவும் அந்த நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

    2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும் சிங்கள வீரர்கள் நந்திக்கடல் பகுதிக்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவர்களை ஒருவர் பின் ஒருவராக சுட்டுக் கொன்றார்களாம். பிரபாகரன் கண் எதிரில், மனைவி, மகள், மகனை கூட்டுக் கொண்ட சிங்கள வீரர்கள் கடைசியில் பிரபாகரனை சுட்டுக் கொன்றதாக அந்த ஆங்கில நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது.

    மே 19-ந் தேதி பிரபாகரனின் பிணம் என்று ஒரு வீடியோ காட்சியையும், புகைப் படங்களையும் சிங்கள ராணுவம் வெளியிட்டது. இந்த படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

    முதலில் சீருடை அணிந்த பிரபாகரன் உடல் என்று ஒரு படத்தை வெளியிட்டனர். பிறகு உடை இல்லாமல் ஒரு உடல் படத்தை காட்டி னார்கள். மூன்றாவதாக சகதி பூசப்பட்ட ஒரு உடலை காட்டி இது தான் பிரபாகரன் உடல் என்று சிங்களர்கள் அறிவித்தனர். இதனால் பிரபாகரன் விஷயத்தில் அவர் என்ன ஆனார் என்பதில் இன்னமும் கேள்விக்குறி நிலவுகிறது.

    பிரபாகரனின் மரணச் சான்றிதழை இன்று வரை இலங்கை கொடுக்கவில்லை. அது போல பிரபாகரனின் மனைவி மதவதனி, மகள் துவாரகா பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் இது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபாகரன் பற்றி பல்வேறு கேள்விக்குறிகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் சரண் அடைந்தார், பிறகு சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் என்ற தகவல்களை உலகம் முழுக்க வாழும் ஈழத் தமிழர்கள் நம்பவும் ஏற்கவும் மறுக்கிறார்கள்.

    பிரபாகரன் ஒரு வீரத் தமிழன், அவர் ஒரு போதும் சரண் அடைந்திருக்க மாட்டார் என்று ஈழ தமிழர்கள் கருதுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்ட வீடியோ ஆவண காட்சிகளை சேனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது என்ற தகவல் ஈழத் தமிழர்களிடம் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வீடியோ காட்சிகள், பிரபாகரன் மரணம் தொடர்பாக புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்குறியையும் உலகம் முழுக்க ஏற்படுத்தி உள்ளது. சேனல்-4 டி.வி.யில் புதிய ஆவணப்படம் நாளை இரவு ஒளிபரப்பான பிறகே இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.


    Posted by விழியே பேசு... at 3:02 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. AnonymousMarch 13, 2012 at 5:21 PM

      படங்களை நம்ப முடியாது இருக்கிறது.இருந்தாலும் சரணடைந்து இருக்க வாய்ப்பில்லை. படுகாயப்பட்ட நிலையில் கொண்டு சென்றிருக்க முடியும்.ஆனாலும் நம்ப முடியாத நிலையிலேயே படங்கள் உள்ளன.ஊகங்கள் எல்லாம் உண்மையல்ல.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ▼  March (333)
      • இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் ...
      • முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மி...
      • ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
      • ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தக...
      • கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வ...
      • உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'
      • போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்...
      • 'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
      • ''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6...
      • மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
      • யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
      • சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத...
      • தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : ...
      • ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?
      • கருணாநிதி மீது ராமதாஸ் பாய்ச்சல்: எதிர்க்கட்சியானா...
      • இணைய தளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட தடை: ஐகோ...
      • 3-டி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘டைட்டா...
      • தாம்பரத்தில் வீடு புகுந்து நந்தா பட பாணியில் கொள்ள...
      • திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெர...
      • நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயன்றேனா!: ந...
      • பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...
      • தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,0...
      • கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!
      • 'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான'...
      • கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில...
      • பட முன்னோட்டம் : 3
      • தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? ...
      • கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் த...
      • சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளி...
      • தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உய...
      • மீண்டும் இணையும் சகோதரிகள் :போயஸ் கார்டனில் சசிகலா!
      • ஜெயலலிதாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்ட...
      • ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையா...
      • இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக...
      • ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்...
      • டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொ...
      • கூடங்குளம்: உண்ணாவிரதம் வாபஸ்!
      • ராஜீவ் காந்தி கொலை: 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு ...
      • அரை குறை ஆடை அணிவதா?: நடிகை ஸ்ரீதேவிக்கு பெண்கள் ச...
      • படையினரை காட்டிக் கொடுத்து தப்பிக்க ராஜபக்சே 'ப்ளா...
      • சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்
      • ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வ...
      • லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா!
      • கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
      • அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இரு...
      • ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்...
      • கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.விடமிருந்து முதல்வருக்கு கடி...
      • சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்
      • ஆசியக் கோப்பை பைனலில் உண்மையில் வென்றது யார்? :புத...
      • கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: சீமான்
      • தமிழக பட்ஜெட்: நிலத்தின் விலை உயரும்...!
      • இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர்...
      • தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
      • மின்வெட்டு குறித்து கருணாநிதியை ஏற்கனவே எச்சரித்தே...
      • ஐ.பி.எல். பயத்தில் அஜித்..!
      • சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம்
      • இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
      • அஜீத்தின் பிறந்த நாளுக்கு பில்லா வராது...
      • மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
      • மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’
      • செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : ...
      • எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சி...
      • இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ...
      • அரசு விடுமுறை நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
      • ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ர...
      • கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன...
      • ஐ.நா. தீர்மானத்தால் பதட்டம்: இந்திய எம்.பி.க்களின்...
      • 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!
      • எல்லா வகையிலும் முயன்றோம்: ராஜபக்ஷேவுக்கு பிரதமர் ...
      • நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
      • கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாத...
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
      • யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே தி...
      • இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக ...
      • இனி கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!
      • இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்த...
      • ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
      • ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்...
      • சீனாவில் ராணுவ புரட்சியா?
      • இளமைக்காக த்ரிஷா ஊசி
      • வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
      • 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்: நீதி...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உய...
      • ஓய்வு பற்றி யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை: சச்சின்
      • இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபு...
      • இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. எதையும் செய்யக் கூடாது-...
      • 'ஐ லவ் யூ ஈரானியர்கள்'.. பேஸ்புக்கில் கலக்கும் இஸ்...
      • இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா...
      • இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியத...
      • ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்...
      • இந்தியாவின் இரட்டை வேடம் ஐ.நாவில் அம்பலம்
      • ரூட்டை மாத்து !: விஜய்
      • இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபர...
      • ‘பரதேசி’யான பாலாவின் படம்
      • கார்த்தி-யின் மூன்றாவது நாயகி
      • இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசி...
      • இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த ந...
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...
      • அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்...
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.