தமிழக மீனவர்கள் 5 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய,
இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக
அந்நாட்டு அமைச்சர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட்
ஆகியோர் மீது போதைப் பொருள்
கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், இலங்கை நீதிமன்றம் கடந்த
30ம் தேதி தூக்குத் தண்டனை
விதித்தது.
இந்நிலையில்,
தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட
தூக்குத் தண்டனையை எதிர்த்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்தியா
சார்பில் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு நேற்று வாபஸ்
பெறப்பட்டது.
இது குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய இலங்கை
அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர்
மோகன சமரநாயகே, மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றதாக
இந்தியா தரப்பில் இன்று முறைப்படி எங்களிடம்
தெரிவிக்கப்பட்டது என்றும், மீனவர்களை விடுதலை செய்வது குறித்து
இரண்டு நாட்களில் அதிபர் ராஜபக்சே அறிவிப்பார்
என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக
மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே
பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய
உத்தரவிட்டுள்ளதாக இலங்கை மாகாண அமைச்சர்
செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில்
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 30ஆம்
தேதி கொழும்பு உயர் நீதிமன்றத்தால் தூக்குத்
தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கும்
பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து
அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும்,
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்றோ அல்லது நாளையோ
தாயகம் திரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே,
கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில்
தமிழக மீனவர்கள் 5 பேரும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள்
சங்கத் தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment