ஒளிப்பதிவாளர்
எம்.டி. சுகுமார் இயக்கும்
படம் ‘காத்தம்மா’. இவர் ‘மைனா’ சுகுமார்
இல்லை. மல்லுவுட் கேமராமேன். மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளில்
இதுவரை 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இதன் நாயகன் பிஜு. ஆதிரா
நாயகி. முக்கிய வேடத்தில் கோவை
சரளா நடிக்கிறார். இசை ஜில்லன். திரைக்கதை,
வசனம் ரூபக், நிஸ்க். ராய்மலமக்கேல்
தயாரித்திருக்கிறார்.
“வில்லன்
களால் பாதிக்கப்பட்ட ஹீரோ பழிவாங்கும் கதைகள்தான்
சினிமாக்களில் அதிகம் இடம் பெற்றுள்ளன.
இதில் கயவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ணான
காத்தம்மா தீயவர்களை எப்படி பழி வாங்குகிறார்
என்பது கதை. ஹீரோயின் ஓரியண்ட்
ஸ்கிரிப்ட் என்றால் அதிகபட்சம் பேய்க்
கதையாக இருக்கும்.
ஆனால் இந்தப் படம் சிறியவர்கள்
முதல் பெரியவர்கள் வரை பார்க்குமளவுக்கு கமர்ஷியல்
படமாக இருக்கும். இந்தக் கதைக்காக ஆதிரா
சண்டை, நடனம் உட்பட கதைக்குத்
தேவையான பயிற்சிகளை எடுத்துக் கொண்ட பிறகுதான் படப்பிடிப்பில்
கலந்து கொண்டார்.
குளியல்
காட்சியில் பெரும்பாலான புதுமுக
நடிகைகள் மறுப்பு சொல்லிவிடுவார்கள். ஆனால்
ஆதிரா முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
டயலாக்கை குறைத்து உணர்வுகளுக்கும், விஷுவலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள்தான் எனக்கு அதிகம் பிடிக்கும்.
அந்த வகையில் இந்தப் படத்தின்
ஒவ்வொரு ஃப்ரேமும் மனசை அள்ளும்‘‘ என்கி
றார் எம்.டி.சுகுமார்.
No comments:
Post a Comment