டெல்லியில்
நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திட்டமிட்டபடி நாளை
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள்
அறிவித்துள்ளன. பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 25% ஊதிய
உயர்வு வழங்க வேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி
ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அதனை ஏற்றுகொள்ள வங்கி
நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. இதனால்
கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் நாடு
முழுவதும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட
பொதுத்துறை வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து நேற்று டெல்லியில் இரண்டாம் பேச்சுவார்த்தை
நடைபெற்றது. இதில் வங்கி ஊழியர்கள்,
அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கலந்து கொண்டனர்.
ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து
செய்தியார்களிடம் பேசிய வங்கி ஊழியர்களின்
சங்க பொது செயலாளர் வெங்கடாசலம்,
திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் போராட்டம்
நடைபெற உள்ளதாக கூறினார். 25% ஊதிய
உயர்வு கோரிக்கையை வங்கிகள் நிருவாகம் ஏற்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து 23% குறைத்து கொள்வதாக கூறியும், 11% மேல் தரமுடியாது என்று
திட்டவட்டமாக குறிப்பிட்டதால், போராட்டம் திட்டமிட்டபடி தொடரும் என்று அவர்
தெரிவித்தார். இதில் பல்வேறு சங்கங்கள்
பங்கேற்க உள்ளனர்.
No comments:
Post a Comment