இலங்கையில்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்
5 பேரையும், தமிழக சிறைக்கு மாற்றுவது
தொடர்பாக அந்நாட்டு
அதிபர் ராஜபக்சேவிடம் பிரதமர் நரேந்திரமோடி டெலிபோனில் பேசினார்.
இதைத் தொடர்ந்து மீனவர்களை தமிழக சிறைக்கு மாற்ற ராஜபக்சே
சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், தூக்கு
தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதில்
இழுபறி நிலை
நீடிக்கிறது. கடந்த 2011ல் ராமேஸ்வரத்தில் இருந்து
மீன்பிடிக்க சென்ற
தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாந்த்
மற்றும் லாங்லெட் ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது
செய்தனர். அவர்கள் மீது ஹெராயின்
போதைப்பொருளை கடத்தியதாக
வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 35 மாதங்களாக விசாரணை நடந்
தது. கடந்த அக்.30ம்
தேதி கொழும்பு உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள்
5 பேருக்கும் தூக்குதண்டனை விதித்து உத்தரவிட்டது. அவர்கள்
நவ.14ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யலாம்
எனவும் உத்தரவிடப்பட்டது. இலங்கை வெலிக்கடை சிறை வளாகத்தில்
அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் அனைவரும் தீர்ப்புக்கு பின் தூக்கு
தண்டனை கைதிகள் அடைக்கப் படும்
தனிச்சிறைக்கு மாற்றப்பட்டனர்.
தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் முதல் தமிழகம்
முழுவதும் மீனவர்கள்
மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்
போராட்டங்களில் ஈடுபட்டு
வருகின்றனர்.
ராமேஸ்வரம்
மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, இந்திய அரசின் வெளியுறவுத்துறை இவ்விஷயத்தில்
தலையிட்டது. கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள்,
தமிழக மீனவர்கள் மீதான வழக்கு குறித்து
தகவல்களை பெற்று,
தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் உத்தரவிட்டது.
இதையடுத்து,
சிறையிலுள்ள மீனவர்களை நேரில் சந்தித்து பேசிய இந்திய
தூதரக அதிகாரி ஒய்.கே.
சின்ஹா, மேல்முறையீடு செய்வதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டார். மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து தமிழக மீன்வளத்துறை
அதிகாரிகள், 5 மீனவர்களின்
வழக்கு குறித்த ஆவணங் களை
வெளியுறவுத்துறைக்கு அனுப்பி
வைத்தனர். மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்ய வக்கீல் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக
தமிழக அரசு ரூ.20 லட்சத்தை வெளியுறவுத்துறை மூலம் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு
அனுப்பி வைத்தது. இலங்கை உயர் நீதிமன்றத்தில் மீனவர்களின்
தீர்ப்பு குறித்த நகலை இந்திய
தூதரக அதிகாரிகள் பெற்றனர்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இலங்கையின் மூத்த வக்கீல் முஸ்
தபா, ஏற்கனவே இவ்வழக் கில்
ஆஜரான வக்கீல் அனில்
டி சில்வா மற்றும் தமிழ்
மொழி தெரிந்த வக்கீல் சாரதி ஆகியோரை
நியமித்தனர்.
நேற்று
இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்
முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மனு
தாக்கல் செய்யப்படவில்லை.
நேற்று காலை 10 மணிக்கு கொழும்பு
உச்ச நீதிமன்றத்திற்கு
இந்திய தூதரகம் சார்பில் நியமிக்கப்பட்ட
வக்கீல்கள் வந்தனர்.
அவர்கள் மனுத்தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை சரிபார்த்தனர்.
மதியம் 2 மணிவரை இப்பணிகள் தொடர்ந்தன. இதற்கிடையே
இந்திய தூதரக அதிகாரிகளிடம் இருந்து
வக்கீல்களுக்கு ஒரு
தகவல் வந்தது. இதையடுத்து மேல்முறையீடு
செய்வதற்கான பணிகள்
உடனடியாக நிறுத்தப்பட்டன. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர்
ராஜபக்சேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
பேசினார். அப்போது மீனவர்கள் 5 பேரையும்
தமிழக சிறைக்கு மாற்ற
வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்து
உறுதியளிக்கப்படும் என்று ராஜபக்சே அப்போது தெரிவித்ததாக
கூறப்படுகிறது.
அதிபர்
ராஜபக்சேயுடன் பிரதமர் மோடி போனில்
பேசியதை இலங்கை வெளியுறவுத்
துறை இணை அமைச்சர் நியோமல்
பெரைரா உறுதிபடுத்தி உள்ளார்.
பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி,
தனது டுவிட்டர் பக்கத்தில்,
மீனவர்கள் 5 பேரையும் தமிழக சிறைக்கு மாற்ற
இலங்கை அதிபர்
சம்மதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு
மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேல் முறையீடு செய்ய இன்னும் 2 நாள்
அவகாசம்
வக்கீல்
அனில் டி சில்வா கூறுகையில்,
மனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும்
2 நாட்களுக்கு மேலாக அவகாசம் இருப்பதால்
தற்போதைக்கு தாக்கல்
செய்யவேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி
நாங்கள் மனுத்தாக்கல்
செய்யவில்லை என்றார். இலங்கையில் உள்ள இந்திய தூதரக வட்டாரத்தில் கேட்டபோது,
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய-இலங்கை அரசுகள் இடையே
உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை
நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முடிவுக்காக காத்திருக்றோம். அவர்கள்
கூறுவதை பொறுத்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்
என தெரிவித்தனர்.
பாம்பன்
மீனவர்கள் போராட்டம் வாபஸ்
தங்கச்சிமடம்
மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை
ரத்து செய்யக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 12வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. ஆனால், பாம்பன் நாட்டுப்படகு
மீனவர்கள் போராட்டத்தை
கைவிட்டு நூற்றுக்கணக்கான படகுகளில் நேற்று கடலுக்கு
மீன்பிடிக்கச் சென்றனர்.
No comments:
Post a Comment